அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு

373 0

சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தது.அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர்  பொதுமக்கள் அறிவிப்பு | Tamil News Free bicycle and vehicle facility for students  attending government schools

இந்த நிலையில் பெரும்பாலான கிராமங்களுக்கு தனியார் பள்ளி வாகனங்கள் அதிக அளவில் வருவதை பார்த்த ஊர் பொதுமக்களுக்கு அரசு பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இதையடுத்து மாரப்பம்பாளையம் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2023-24-ம் கல்வி ஆண்டில் சேருகிற மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் இலவச வாகன வசதி செய்யப்படும் என்று அப்பகுதி ஊர் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த அறிவிப்புகள் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக இந்த கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு ஊர்பொதுமக்கள் அறிவித்துள்ள இலவச சைக்கிள், இலவச வாகன வசதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Post

தீபாவளிக்கு 1 நாள் மட்டுமே! தமிழ்நாட்டின் கடைத் தெருக்களில் குவிந்த மக்கள்

Posted by - October 19, 2025 0
#Diwali #HappyDiwali #Diwali2023 (or current year) #FestivalOfLights #DiwaliCelebration #DiwaliVibes #IndianFestival #Deepavali #DiwaliDecorations #DiwaliGifts #DiwaliSweets #DiwaliShopping #LightUpYourLife #JoyOfDiwali #FestiveSeason தீபாவளி முன்னிட்டு…

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

Posted by - March 14, 2025 0
தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *