மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

212 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர் என்ற மாணவரும் படித்து வருகிறார். மாணவர்கள் 2 பேரும் தங்களுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தனர். இதனால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்துக்கும் உதயசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றுடன் தேர்வு நிறைவடைவதால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயசங்கர் வீட்டில் இருந்த கத்தியை மறைத்து எடுத்து வந்தார்.Hyderabad: Man Stabbed To Death With Butcher's Knife As People Look On

தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட ஆசிரியரும் சக மாணவர்களும் உதயசங்கரை தடுத்து நிறுத்தினர். காயமடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் சிகிச்சைக்காக ராஜாநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜமகேந்திராவரத்துக்கு மாற்றப்பட்டார்.

மாணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - July 10, 2023 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

Posted by - April 5, 2023 0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்தியாவில்…

தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

Posted by - October 17, 2025 0
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *