ரிஷப் பண்ட் உடல்நிலை எப்படி உள்ளது…? உலகக் கோப்பையில் விளையாடுவாரா…? புது அப்டேட்..

454 0

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு இனி அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், எதிர்பார்த்ததைவிட அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நடந்த பயங்கர கார் விபத்தில், முன்னணி கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். அவருக்கு தலை, முதுகு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரூர்க்கியில் முதற்கட்ட சிகிச்சையும், மும்பையில் கால் மூட்டில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 5 மாதங்களாக ஓய்வில் உள்ளதால் ஐபிஎல் தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்துவிட்டார். ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.இந்நிலையில், ரிஷப் பந்தின் உடல்நிலையில், எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கிறது எனவும், இதனால் மற்றொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை எனவும் மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.

Related Post

ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி – ஜெமிமா வெறித்தனம்

Posted by - October 31, 2025 0
Jemimah Rodrigues IND Vs AUS: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதோடு, இந்திய அணி பல அரிய சாதனைகளையும் படைத்துள்ளது. Jemimah…

பழி தீர்க்க காத்திருக்கும் ரோகித் படை! – பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா தோனி படை..!

Posted by - May 6, 2023 0
 ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை மும்பை அணி எட்டிப் பிடித்து அசத்தியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

கோட்டையை இழந்த CSK, கோப்பை வரைக்கும் எப்புடி.. தோனியின் மீதே அதிருப்தி வர வைத்த சம்பவம்!

Posted by - April 6, 2025 0
Chennai Super Kings: படம் பிளாப் ஆனா என்ன தல ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும். போட்டியில் தோத்தா என்ன தல ஆடிட்டோரியத்துக்கு வந்தா மட்டும் போதும். சென்னை…

கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

Posted by - March 9, 2025 0
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *