ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு இனி அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், எதிர்பார்த்ததைவிட அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நடந்த பயங்கர கார் விபத்தில், முன்னணி கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். அவருக்கு தலை, முதுகு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரூர்க்கியில் முதற்கட்ட சிகிச்சையும், மும்பையில் கால் மூட்டில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 5 மாதங்களாக ஓய்வில் உள்ளதால் ஐபிஎல் தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்துவிட்டார். ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.இந்நிலையில், ரிஷப் பந்தின் உடல்நிலையில், எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கிறது எனவும், இதனால் மற்றொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை எனவும் மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.