டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் – தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!

294 0

ந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.

ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு அவர் பேசுகையில், “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, சோமோட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.பழைய ஊதியம் வழங்கக் கோரி தனியார் உணவு டெலிவரி ஊழியர்கள் நடைபயணம்:  பூந்தமல்லியில் பரபரப்பு | Dinakaran

நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று (ஆக 15) அறிவிக்கிறேன்” என்று கூறினார்.அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் ஸ்விகி, சோமோட்டோ போன்ற உணவு விநியோக சேவை, ரேபிடோ, ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவை தளங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலனுக்காக ‘கிக்’என்கிற அமைப்பு இயங்கி வருகிறது. கர்நாடகா மாநில தேர்தலுக்கு, வாக்கு சேகரிக்க வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ‘கிக்’ பணியாளர்களை சந்தித்துடன், அவர்களுக்கான நலவாரியம் தொடங்கி மற்றும் சலுகைகள் ஏற்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

அதன்பின், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், இந்த பணியாளர்களின் நலனுக்காக நாட்டில் முதல் முறையாக, 4 லட்சம் ரூபாயில் விபத்து மற்றும் உயிர் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ‘கிக்’ பணியாளர்களுக்கு தனியான நலவாரியம் அமைக்கப்படுமென மசோதா நிறைவேற்றியுள்ளது.கிக் பணியாளர்களுடன் ராகுல் காந்தி

ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு தேசிய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் நலனுக்கான முதல் முயற்சியாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உணவு, இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி சேவை பணியாளர்களுக்காக தனியான நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளார். ‘கிக்’ பணியாளர்கள் வகையில் பலதரப்பட்ட முறைசாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் உணவு டெலிவரி தளங்களான ஸ்விக்கி, சோமோட்டோ, டன்சோ போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், மருந்து மற்றும் இதர பொருட்கள் விநியோகம்; ரேபிடோ, ஊபர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் நிதி ஆயோக் 2022 ஜூன் மாதம் எடுத்த கணக்கெடுப்பின் படி, உணவு விநியோகம், டாக்ஸி சேவை, பகுதி நேரமாக சேவைகள் வழங்குவோர் என ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் மொத்தம் 77 லட்சம் பேர் ‘கிக்’ பணியாளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ‘கிக்’ பணியாளர்களின் எண்ணிக்கை 2.35 கோடி பேராக உயரக்கூடும் என அறிவித்துள்ளது.

77 லட்சம் அளவுக்கான ‘கிக்’ பணியாளர்கள் இருந்தும், இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட இவ்வகை பணியாளர்கள் எந்த வகையிலும் முறைப்படுத்தப்படாத முறைசாரா பணியாளர்களாகவே உள்ளனர். உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி பணி செய்யும் ‘கிக்’ பணியாளர்கள் தங்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக மாற்றி, தொழிலாளர் நலத்துறையின் அடிப்படையான சலுகைகளையாவது வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ‘கிக்’ அமைப்பினர் சிலர், “எங்கள் குறைகளை கேட்க இதுவரை எந்த அமைப்பும் இருந்ததில்லை. நலவாரியம் அமைப்பதால், எங்களுக்கான நியாயமான கூலி, தொடர்ச்சியான பணி மற்றும் திடீரென வேலை பறிப்பு சம்பவங்களை அரசு தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம். தற்போது, நாங்கள் நியாயமான கூலி கேட்டு போராட்டம் நடத்தினால் கூட, எங்கள் நிறுவனம் எங்கள் ‘ஐ.டியை பிளாக்’ செய்து எங்கள் பணியை பறிக்கின்றனர். ராஜஸ்தானை தொடர்ந்து தமிழக அரசும் ‘கிக்’ பணியாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

இந்திய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் குறைகள் கேட்டு சரிசெய்ய எந்த ஒரு அரசு அமைப்பும் இல்லை என்பது தான் வருத்தத்துக்குறியது. ஏனெனில் ‘கிக்’ பணியாளர்கள் அரசின் எந்தவொரு தொழிலாளர் நலவாரியத்திலும் பதிவு செய்யப்படாமல் உள்ளனர். இதனால், மற்ற சாதாரண பணியாளர்களுக்கு கிடைக்கும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, உதவித்தொகை, ஓய்வூதியம் என எந்தவொரு அடிப்படை தொழிலாளர் நலச்சட்டத்தின் உரிமைகளும், சலுகைகளும் கிடைப்பதில்லை” என்றனர்.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசினோம், “தமிழகத்தில் உள்ள பல தொழிலாளர்களின் நலனை காக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்காக நலவாரியம் அமைப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதற்கட்ட அறிவிப்பு தான். இனி துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அளவிலான அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, இந்தப்பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நலவாரியத்தின் செயல்பாடுகளை தீர்மானிப்போம்” என்றார்.

Related Post

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Posted by - November 30, 2024 0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…

முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

Posted by - April 6, 2025 0
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும்…

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்- தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடுமா?

Posted by - July 8, 2025 0
சென்னை: 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.…

சோனியின் புதிய தமிழ் அலைவரிசை!

Posted by - February 9, 2026 0
சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில வித்தியாசமான முயற்சிகளுடன் தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *