CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்…

85 0

 முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.

செயல்படாத திருத்தணி அரசு மருத்துவமனை:

கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதே ஆண்டு சட்டப்பேரவையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையைத் தரம் உயர்த்த 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானமும் நிறைவேற்றி, ஒப்பந்தமும் விடப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அமைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் காணொளிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலினால் தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி மருத்துமனை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு வழங்குவதாக அறிவித்த 45 கோடி என்னானது? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

”உயிரோடு விளையாடும் அரசு”

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும். வெற்று விளம்பரத்திற்குத் தரம் உயர்த்துவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக் கூடத் திமுக அரசு நிறைவு செய்யாதிருப்பது கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடும் கொடுஞ்செயல்” என சாடியுள்ளார்.

”ஜிப்மருக்கு செல்லும் அவலம்”

விழுப்புரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதியோ, மருத்துவர்கள் நியமனமோ செய்யப்படாத காரணத்தால் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு இயங்கி வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக விழுப்புரம் சுற்றுவட்டார மக்கள் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்குப் போகச்சொல்லி அலைகழிக்கப்படுவதும், இதுகுறித்துப் பலமுறை பொதுமக்கள் புகாரளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணியாளர்கள் பற்றாக்குறை:

தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருந்துகள் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை, படுக்கை வசதி இல்லை என்பதால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவரும் நிலையில், தரம் உயர்த்தப்பட்ட மருத்துமனைகளும் அதைவிட மிக மோசமான நிலையிலிருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமை என சீமான் எச்சரித்துள்ளார். இத்தனை மோசமான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு ‘இந்தியா வியக்கும் திராவிட மாடல், உலகம் வியக்கும் நான்காண்டு சாதனை’ என்று திமுக அரசு பேசுவது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசு, தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து மக்கள் பயன்பாட்டிற்காக விரைந்து இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறையைப்போக்கி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்க உடனடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பாப்பாக உள்ளது.

Related Post

வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

Posted by - March 8, 2024 0
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல் நலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.…

கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

Posted by - December 7, 2024 0
2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்…

தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

Posted by - October 27, 2024 0
தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக்…

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - December 28, 2022 0
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக…

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

Posted by - April 13, 2024 0
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *