நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

229 0

தர்மபுரி:

தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடைவது வழக்கம்.. காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்..

அந்தவகையில், இந்த வருடமும் புரட்டாசி மாதம் தொடங்கியிருக்கிறது.. இதனால், ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இறைச்சியை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது.

திருப்புவனம் சந்தை:

குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டுவது வழக்கம்.. இந்த திருப்புவனம் மார்க்கெட்டில்தான், வாரம்தோறும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடை சந்தையும், பிறகு காய்கறி சந்தையும் நடைபெறுவது வழக்கம். கால்நடை சந்தையில் ஆடு, கோழி, தவிர, சேவல், வாத்து போன்றவைகளும் விற்பனை செய்யப்படும்.. இதற்கு காரணம், திருப்புவனத்தைச் சுற்றிலும் பெத்தானேந்தல், மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, கோழிகளை விவசாயிகள் வளர்த்து, இங்குவந்துதான் விற்பனை செய்கிறார்கள்.. எப்போதுமே 300 முதல் 1000 ஆடு, கோழிகள் வரை விற்பனையாகும்.. ஆனால், புரட்டாசி புரட்டாசி தொடங்கிவிட்டதால், ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தும் சரியாக விலைக்கு போகவில்லையாம்.

ஆட்டுக்கறி:

10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10,000 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது, வெறும் ரூ.8000க்கு மட்டுமே விலை போவதாக கவலையுடன் கூறுகிறார்கள். நாட்டுக்கோழி விலையும், கிலோவுக்கு ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.. இப்போது, ரூ.450ஆக உயர்ந்துவிட்டதாம். 25 கிலோ எடை கொண்ட கிடா 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாதம் முடியும் வரைக்கும், இறைச்சி விலை குறைவாகவே விற்கப்படும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருத்தம்:

இதுபோலவே, தர்மபுரி மாவட்டத்திலும் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.. இங்குள்ள நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.. இதற்காகவே வியாபாரிகள், கால்நடைகளை கொண்டுவந்து இங்கு விற்றுவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.. இதற்காகவே, ஆட்டுச்சந்தை பிரத்யேகமாக நடைபெற்றும் வருகின்றது.. தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்காக இன்று வந்திருந்தனர்.

விற்பனை:

ஆனால், காலை 6 மணிக்கு கூடிய ஆட்டுச்சந்தையில் சிறிய அளவில ஆடுகள் 2, 500 ரூபாயில் துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 16,000 ரூபாயில் வரை மட்டுமே விற்பனையானதாம்.. இந்த புரட்டாசி முடியும்வரை இப்படித்தான் மந்த நிலையில் விற்பனையாகும் என்கிறார்கள்.

Related Post

தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?

Posted by - April 24, 2025 0
மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு…

வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின் நண்பன் நன்னாரி வேர்கள்

Posted by - November 25, 2023 0
சென்னை: ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய…

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

Posted by - December 10, 2024 0
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன்…

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இழப்பீடு வழங்கவும் மனமில்லை!- இபிஎஸ்

Posted by - July 14, 2025 0
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *