மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு மிஞ்சிய மருந்து என்றுமில்லை

184 0

சென்னை:

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகள் அதில் உண்டு.

நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியைதான், சுக்கு என்று சொல்கிறோம்.. இது எளிதில் கெடாத உணவுப்பொருள்.. சமையலுக்கும், மருத்துவத்துக்கும், பயன்படக்கூடியது.

செரிமானம்:

செரிமானத்துக்கு, இஞ்சியை விட சுக்கு மிகவும் நல்லது.. அஜீரண கோளாறு இருப்பவர்கள், சுக்கு + துளசி இலை சேர்த்து மென்று விழுங்கினாலே, அஜீரணம் நீங்கிவிடும்.. வாந்தி, குமட்டலும் நின்றுவிடும். அதனால்தான், மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு சுக்கை அரைத்து தருவார்கள்.. இதனால், குழந்தைகளுக்கு பசியும் நன்றாக எடுக்கும்.மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு  மிஞ்சிய மருந்து என்றுமில்லை | Do you know Amazing Health Benefits in the  Dry Ginger and ...

பித்த வாந்தி இருந்தாலும், சுக்குத்தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். தலைபாரம், தலையில் நீர் கோர்த்திருந்தால், சுக்குடன் பெருங்காய தூளை சேர்த்து தலையில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். காரணம், தலையிலிருக்கும் நீரை, இந்த சுக்கு உறிஞ்சிவிடும்.

கழிவுகள்:

மலச்சிக்கல் இருப்பவர்கள், சுக்குடன், சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டாலே போதும்.. கழிவுகள், நச்சுகள் வெளியேறி, குடல் சுத்தமாகிவிடும்.. அதேபோல, சுக்குடன் சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள கிருமிகள்அழியும். . உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சுக்கு பயன்படுத்தலாம்..

இந்த ஒரு வாணலில், மல்லி விதை, மிளகை வறுத்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அதில், இந்த தூளை சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது, ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து, தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால், தேவையற்ற தொப்பை பகுதிகளிலுள்ள கொழுப்புகள் கரைந்து, உடல் எடையை குறையும்.

விஷ ஜூரம்:

இந்த சுக்குப்பொடி, விஷக்கடியையும் விரட்டும், விஷஜூரத்தையும் விரட்டும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை போன்றவற்றை சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தாலே விஷஜூரம் பறந்துவிடும்

அதேபோல, சுக்கு தூள், உப்பு தூள் இரண்டையும் சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் கூச்சம் நீங்குவதுடன், வாய் துர்நாற்றமும் நீங்குமாம். சுக்கை தட்டிப்போட்டு வெந்நீர் வைத்து தலைக்கு குளித்து வந்தால், நீர்க்கோர்வை, தலைவலி வராது..

வெற்றிலை:

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். வாதம், மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கு சுக்கு நல்ல தீர்வினை தருகிறது. சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிட்டால், பசும்பாலில் சுக்கு தூளையும், நாட்டு சர்க்கரையும் சேர்த்து குடித்தாலே, சிறுநீரக நோய் தொற்று நீங்கிவிடும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது சுக்கிற்கும் பொருந்தும்..

காரணம், அதிக அளவு சுக்கு பயன்படுத்தினால், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் வரலாம். அதிலும் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்று சுக்கு சாப்பிட வேண்டும்.

Related Post

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

உஷார்… டெங்கு காய்ச்சலின் இந்த 4 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

Posted by - September 14, 2023 0
டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே…

500 பள்ளிகள் தத்துகொடுப்பது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

Posted by - January 2, 2025 0
அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொன்னோம். தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல்…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை… ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்!

Posted by - February 20, 2024 0
கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன் – அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *