தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

379 0

புதுடெல்லி:

சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன் காரணமாக இந்த வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்காமலே ஆன்லைன் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனிநபர் கடன்களை தாராளமாக வழங்கி வந்தது.

இதன் காரணமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் கடன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. தனிநபர்களை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு சிபில் அடிப்படையில் கடன் வேண்டுமா? என்று நச்சரிப்பதும்.கடன் மறு சீரமைப்பு செய்ய வசதி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த 50,000 கோடி: ரிசர்வ்  வங்கி அறிவிப்பு | Dinakaran விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு எவ்வித ஆவணமும் இன்றி உடனே கடன் கொடுக்கும் நிலையும் உள்ளது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும் பொருளாதார ரீதியில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் நிதி இழப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கு உரிய ரிஸ்க் வெயிட் 100 சதவீதம் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பற்ற முறையில் தனி நபர்களுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்படும் மேலும் கடன் வழங்குவதற்காக வங்கிகள் வைத்திருக்கும் இருப்பில் 12 லட்சம் கோடிரூபாய் வரை கட்டுப்படுத்தவும் இது ஏதுவாக அமையும்.

தற்போது வழக்கமாக 100 ரூபாயில் 9 ரூபாய் தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கான மூலதனமாக வைப்பு வைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூலதன இருப்பு ரூ.11. 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதன் மூலம் வங்கிகள் தனி நபர்களுக்கு கடன் வழங்கும் திறனை கட்டுப்படுத்த எதுவாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ரிஸ்க் வெயிட் காரணமாக வீட்டு கடன், கல்வி கடன், நகை கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அது வழக்கம் போல வழங்கப்படும் என்றும் இந்த கடன்களுக்காக ரிஸ்க் வெயிட் 100 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் மட்டுமே கூடுதலாக 25 சதவீதம் அதிகரித்துள்ளதால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இனிமேல் பெர்சனல் லோன் என்று அழைக்கப்படும் தனிநபர் கடன்களை வழங்குவதில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனி நபர்கள் கடன் வழங்குவதற்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் தெரியவரும்.

இதன் காரணமாக தனிநபர் கடன்கள் வழங்குவது குறைக்கப்பட்டு மற்ற கடன் சேவைகள் கூடுதலாக கிடைக்க உரிய விதிமுறைகளை வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தீவிரமாக கண்காணிக்கும் படியும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக கிரெடிட் கார்டு வழங்குவதிலும் பல்வேறு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கடைபிடிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் வருங்காலங்களில் கிரிடிட் கார்டு வழங்குவது மற்றும் அதில் உள்ள லிமிடேஜ் தொகை தொடர்பாகவும் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Post

இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?

Posted by - August 21, 2024 0
இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?2024-25ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பல நிறுவனங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்…

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted by - July 20, 2023 0
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும்…

இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

Posted by - December 14, 2024 0
WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு…

தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் – இனிமே இப்படி தான், விலை?

Posted by - August 4, 2025 0
பதிவு அஞ்சல் சேவையை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நிறுத்துவதாக தபால் துறை அறிவித்துள்ளது. India Registered Post: பதிவு அஞ்சல் சேவையை கடந்த 50 ஆண்டுகளுக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *