ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

231 0

சென்னை:

ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பை அகற்றும் திறன் ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. மேலும் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன்பு ஆரஞ்சு பழத்தை ஜூஸாக போட்டு குடித்து வருவது நன்மை தரும்.ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட "இந்த" உணவுகளுடன்  சாப்பிடாதீர்! | Dont eat Orange along with some foods - Tamil Oneindia

இந்த ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அது போல் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. மலட்டுத்தன்மை ஏற்படாமல் பாதுகாக்கிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது போல் ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர் தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். இந்த பழம் ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தக்காளி: ஆரஞ்சு பழத்துடன் சேர்த்து உண்ணக் கூடாத சில உணவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தக்காளி. இதுவும் ஆரஞ்சும் அசிடிக் உணவு பொருட்களாகும்.ஒரே நேரத்தில் இரு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும்.

தயிர்: அது போல் தயிரிலும் அமிலத்தன்மை இருப்பதால் அத்துடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது. இதுவும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்துடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.

மது, காபி: ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவிட்டு காபி குடித்தல், மதுபானம் குடித்தல் கூடவே கூடாது. இவற்றை செய்தால் வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். அது போல் பால் பொருட்களையும் ஆரஞ்சு பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

Related Post

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

Posted by - December 10, 2024 0
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன்…

தாய்க்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

Posted by - June 10, 2023 0
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர்…

திருச்சி சிவா, கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல்- தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

Posted by - March 16, 2023 0
திருச்சியில் தி.மு.க கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *