நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

308 0

சென்னை:

பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா?

மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய நிலக்கடலை.. இந்த நிலக்கடலையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரத்த நாளங்களை நிலக்கடலை பாதுகாக்கிறது.. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது..

நிலக்கடலை:

முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த நிலக்கடலை. இதற்கு காரணம், வைட்டமின் C, E இரண்டுமே கடலையில் உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல பாதுகாக்கிறது.வேர்க்கடலை.. வறுத்த வேர்க்கடலை + பச்சை வேர்க்கடலை.. அடடா இது தெரியாம  போச்சே.. நோட் பண்ணுங்க மக்களே | Do you know the Health Benefits of Peanuts  and Ground Nut is the Best ...

சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. . தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு நிலக்கடலை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

நரம்பு மண்டலம்:

மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது… ஞாபக சக்தியையும் பெருக்குகிறது.. புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த நிலக்கடலைக்கு இருக்கிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும், இந்த நிலக்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், நிலக்கடலையை குறைத்து கொள்ள வேண்டும்.. அலர்ஜி பிரச்சனை முதல் சுவாசம் பிரச்சனை வரை வரலாம்.. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் நல்லது.

யாரெல்லாம் தவிர்க்கலாம்:

சிலவகையான நோய்களில், நிலக்கடலையை சாப்பிட்டால், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, நோயாளியின் பிரச்சினைகளை இன்னும் அதிகரிக்க செய்துவிடுமாம்.. ஒருவேளை உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால், நிலக்கடலையை தவிர்த்துவிடலாம்.. இதனால், உடலில் அரிப்பு, வீக்கம், குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. காரணம், இந்த நிலக்கடலையில் நிறைய சோடியம் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க செய்துவிடும்.. இதனால் இதயம் தொடர்பான நோய்களும் உருவாகிவிடும்.. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிலக்கடலையை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதேபோல, ஓவர் வெயிட் இருப்பவர்களும் நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. நிறைய கலோரிகளும், கொழுப்புகளும் உள்ளதால், உடல் எடை மேலும் அதிகரித்துவிடும்.. மூட்டு வலி உள்ளவர்களும் நிலக்கடலையை தவிர்த்துவிட வேண்டும். அசிடிட்டி பிரச்சனை இருந்தாலும், நிலக்கடலையை தவிர்க்கலாம்..

ஊறவைத்த நிலக்கடலை:

எப்போதுமே நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி சாப்பிட சொல்கிறார்கள். இதனால், பித்தம் உடலில் அதிகம் சேராது.. அல்லது வேர்க்கடலையை கஞ்சியாக அல்லது வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடுவதால், கூடுதல் பலம் கிடைக்கும். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த நிலக்கடலை மிகவும் நல்லது.

Related Post

பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!

Posted by - November 21, 2025 0
தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது என்று கூறி மீண்டும்…

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

Posted by - December 29, 2023 0
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு…

சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Posted by - February 17, 2023 0
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…

திமுக செய்யும் ஓவர் அராஜகம் ..கோட் படத்துக்கு வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்த தளபதி

Posted by - September 2, 2024 0
செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக திமுகவினர் பலவிதமான தடைகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த…

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் ….

Posted by - April 6, 2023 0
தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *