என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

275 0

சென்னை:

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் பரவியதால் பொருளாதார அளவில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் உலக பெருந்தொற்றாக அறிவித்தது.

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா  தரவு ஆய்வாளர் | Covid Data Analyst says that no new variant in India in  last 30 days - Tamil Oneindia
இந்த பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அனைத்து தொழில்களுமே முடங்கின. லாக்டவுன், வீட்டிலிருந்தே பணியாற்றுதல் , வேலை இழப்பு, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற விஷயங்கள் பொதுமக்களின் வாழ்வை புரட்டி போட்டது.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கடும் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் 3 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தினமும் 1, 2 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு பரவத் தொடங்கிவிட்டது.

பல மாதங்களாக 500 க்கும் குறைவாக இருந்த நிலையில் கேரளாவில் திடீரென ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை தொட போவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்று வருகிறார்கள். அவர்கள் கொரோனாவை தொற்றி வந்துவிடுவார்களோ என்ற அச்சம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கொரோனா டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா இந்தியா தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 30 நாட்களாக புதிய வேரியண்ட் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் ஓமிக்ரான் வேரியண்ட்களான (எக்ஸ்பிபி, ஓமிக்ரான், பிஏ 2. 38) உள்ளிட்டவை காணப்படுகின்றன. எனவே பயப்படுவதற்கு எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

Posted by - December 6, 2023 0
சென்னை: ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது.…

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- உதயநிதி பதிவு …

Posted by - November 30, 2022 0
பிறந்த நாள் அன்று என்னை வாழ்த்திய, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியினர், மாற்றுத்திறனாளி தோழர்கள், திருநங்கை-திருநம்பிகள், கலைத்துறையினர், சமூக வலைதள தன்னார்வலர்கள், பத்திரிகை மீடியாவினர்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

சந்தி சிரிக்கும் சட்ட-ஒழுங்கு? கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்? வெயிட்டிங்கில் எதிர்க்கட்சிகள்

Posted by - April 28, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட-ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்க பதில் அளிக்க உள்ளதால், சட்டசபையில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை…

அனைத்து வசதிகளும் தயார்… மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?

Posted by - May 5, 2025 0
வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *