என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

283 0

சென்னை:

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் பரவியதால் பொருளாதார அளவில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் உலக பெருந்தொற்றாக அறிவித்தது.

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா  தரவு ஆய்வாளர் | Covid Data Analyst says that no new variant in India in  last 30 days - Tamil Oneindia
இந்த பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அனைத்து தொழில்களுமே முடங்கின. லாக்டவுன், வீட்டிலிருந்தே பணியாற்றுதல் , வேலை இழப்பு, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற விஷயங்கள் பொதுமக்களின் வாழ்வை புரட்டி போட்டது.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கடும் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் 3 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தினமும் 1, 2 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு பரவத் தொடங்கிவிட்டது.

பல மாதங்களாக 500 க்கும் குறைவாக இருந்த நிலையில் கேரளாவில் திடீரென ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை தொட போவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்று வருகிறார்கள். அவர்கள் கொரோனாவை தொற்றி வந்துவிடுவார்களோ என்ற அச்சம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கொரோனா டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா இந்தியா தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 30 நாட்களாக புதிய வேரியண்ட் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் ஓமிக்ரான் வேரியண்ட்களான (எக்ஸ்பிபி, ஓமிக்ரான், பிஏ 2. 38) உள்ளிட்டவை காணப்படுகின்றன. எனவே பயப்படுவதற்கு எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் – பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி

Posted by - January 19, 2024 0
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே

Posted by - July 11, 2025 0
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வீடுகளுக்கே தேடிச்சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் கடையில்…

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Posted by - June 7, 2025 0
மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - May 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *