ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை… ஒட்டுமொத்த இயக்கமே இபிஎஸ் பின்னால் இருக்கு ; கடம்பூர் ராஜு!!

190 0

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகையும், நிவாரணமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அதிகப்படியான மழைப்பொழிவு, நூற்றாண்டு காலம் இல்லாத அளவு தூத்துக்குடி மாவட்டம் சந்தித்தது குறிப்பாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவானது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக 50 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் விளைவாக மாவட்டத்தின் பல இடங்களில் அதிகமான கண்மாய்கள் உடைப்பு, சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் தீவு போல துண்டிக்கப்பட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

கோடநாடு என்பது தனிப்பட்ட சொத்து அம்மா அவர்கள் அம்மா அவர்களோடு இணைந்து சேர்ந்து வாங்கப்பட்ட டிரஸ்டின் மூலமாக அதில் அவர்கள் உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் அங்கே சென்று மேம்பாட்டு பணிகளை செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அம்மாவின் மேல் உள்ள விசுவாசத்தின் காரணமாக இப்பணியை செய்தால் நல்லது தான். அம்மாவிற்கு யார் பெருமை சேர்த்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை. நீதிமன்றத்தில் அனைத்து தீர்ப்புகளும் வந்தாகிவிட்டது. ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது. 100 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பின்னால் இருக்கின்ற நேரத்தில் யாரை வைத்து அவர் (ops) அரசியல் செய்யப் போகிறார், என்றார்.

Related Post

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

சர்க்கரை நோயால் உங்க உயிருக்கு ஆபத்து வராமல் தடுக்க… ‘இந்த’ 6 விஷயங்கள நீங்க கட்டாயம் செய்யணுமாம்!

Posted by - November 18, 2023 0
உலகளவில் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது சர்க்கரை நோய். இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு நாளுக்கு நாள் சர்க்கரை நோயால்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *