காடுவெட்டி என்பது சரித்திரத்துடன் தொடர்புடைய பெயர் என்று வாதிட்டு, காடுவெட்டி பெயரை சென்சாரிடமிருந்து காத்துள்ளார் சோலை ஆறுமுகம்.
சோலை ஆறுமுகம் இயக்கத்தில், ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் காடுவெட்டி படம் தயாராகியுள்ளது. காடுவெட்டி என்றால், பாமகவின் முதன்மை தலைவர்களில் ஒருவரான மறைந்த காடுவெட்டி குருதான் நினைவுக்கு வருவார். இதில் சங்கீர்த்தனா, விஷ்மியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அவர்களுடன் சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்காடுவெட்டி படத்தை சென்சாருக்கு திரையிட்ட போது, காடுவெட்டி பெயருக்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி செய்ய, காடுகளில் உள்ள மரங்களைவெட்டி சமன்படுத்தி, அதில் பயிற்சி மேற்கொள்வார்கள். பிறகு அது விளைநிலமாக மாற்றப்படும். அத்தகையை இடங்களை காடுவெட்டி என்பார்கள். தமிழ்நாட்டில் அப்படி 11 இடங்கள் உள்ளன. ஆக, காடுவெட்டி என்பது சரித்திரத்துடன் தொடர்புடைய பெயர் என்று வாதிட்டு, காடுவெட்டி பெயரை சென்சாரிடமிருந்து காத்துள்ளார் சோலை ஆறுமுகம்.ஆனாலும், படத்தில் வரும் வசனங்கள், காட்சிகளுக்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடைசியில் 31 இடங்களில் கத்திரிப்போட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. காதலை முன்வைத்து அனைவரையும் ஒழிக்க நினைத்தால் அந்த வன்முறை தலைமுறைகளாகத் தொடரும் என்ற கருத்தின் பின்னணியில் காடுவெட்டியை எடுத்துள்ளதாக சோலை ஆறுமுகம் கூறியுள்ளார்.மோகன் ஜி வழியில், சில அரசியல்வாதிகள் சொல்லும் நாடகக் காதலுக்கு வலுசேர்க்கும் வகையில் காடுவெட்டி எடுக்கப்பட்டிருப்பது அதன் ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.