வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

210 0

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல் நலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.மகிழ்ந்திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்படுத்து வரும் நிலையில் படக்குழு சிறிய இடைவெளி எடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது .இதனால் அஜித்துக்கு என்ன ஆனது எதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என ரசிகர்கள் ஒருபக்கம் புலம்ப மறுபக்கம் அவர்க்கு எதோ பெரிய பிரச்னை இருப்பதாக பல வகையான தகவல் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அஜித்தின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில் :

சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று (மார்ச் 7) வழக்கமான உடல் பரிசோதனைக்குச் சென்றார். அதில் அவரின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதாகவும், மைனர் ஆப்ரேஷன் மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாககவும் தற்போது அஜித் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார்

Related Post

சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

Posted by - April 11, 2023 0
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

Posted by - April 13, 2023 0
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக நகரமன்ற உறுப்பினர்: கடலூர்…

நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு

Posted by - January 5, 2025 0
2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2019…

ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு- போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted by - February 16, 2023 0
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ‘அன்புஜோதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…

ஜப்பானிய வாட்டர் தெரபி என்றால் என்ன? ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணமாம்…!

Posted by - December 6, 2023 0
தினமும் காலையில் எழுந்தவுடன் பல கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது ஜப்பானிய நீர் சிகிச்சையின் ஒரு அங்கமாகும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *