நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரும் 2025 ஆம் ஆண்டுக்கான மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது, தொகுதி பங்கீடு, கூட்டணி முடிவு என தேர்தல் களமே பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை இன்று சந்தித்தார்.இந்த சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை தேர்தலில் (ராஜ்யசபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியானது.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 40 தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.