‘மட்டன் உப்பு கறி’ ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

356 0

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

அசைவ உணவுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது மட்டன். அதுவும் மட்டனை காரசாரமாக சமைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும். முக்கியமாக சம்மரில் மட்டன் சாப்பிடுவது நமது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் இந்த வெயில் காலத்தில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள்.

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மட்டன் வேகவைக்க தேவையானவை :

  • மட்டன் – 500 கிராம்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கல் உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

மற்ற பொருள்கள் :

  • நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்
  • தக்காளி – 2
  • காய்ந்த குண்டு மிளகாய் – 20
  • முழு நாட்டு பூண்டு – 2
  • கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

    செய்முறை :

    முதலில் குக்கரில் அலசிய மட்டன், மஞ்சள் தூள், கல் உப்பு மற்றும் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அடுப்பில் மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.

    அடுத்து அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த குண்டு மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நாட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் குண்டு மிளகாயை கரண்டி கொண்டு ஓரளவிற்கு மசித்து கொள்ளவும். அப்போதுதான் அதன் கரம் கறியில் இறங்கும்.

    பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை சமைக்கவும்.

    தக்காளி மென்மையாக வதங்கியவுடன் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.

    சில நிமிடங்கள் கழித்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி கறி நன்றாக வேகும்வரை சமைக்கவும்.

    குறிப்பு : அடிக்கடி மூடியை திறந்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

    மட்டன் நன்றாக வெந்து தண்ணீரெல்லாம் வற்றி வறுபட்டவுடன் உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்து அதன் பின் கறிவேப்பிலையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.அவ்வளவுதான் சுவைமிக்க காரமான மட்டன் உப்பு கறி ரெடி…

Related Post

தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

Posted by - March 2, 2024 0
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப்…

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

Posted by - December 28, 2024 0
எதிர்நீச்சல் எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி,…

Water Heater வாங்குறதுக்கு முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Posted by - December 23, 2025 0
குளிர்காலம் ஆரம்பிச்சுடுச்சா, வீடுகள்ல முதல் தேவை Water Heater (Geyser) தான். ஆனா மார்க்கெட்டுல இருக்குற நிறைய options-ல எது சரி, எது safe, எது current…

பிரியங்காவின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட 5 தொகுப்பாளினிகள்.. கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்த விஜய் டிவி

Posted by - September 16, 2024 0
விஜய் டிவி பொருத்தவரை எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மக்களை பொழுதுபோக்கும் நிகழ்ச்சியாக பெயர் வாங்கி வெற்றி பெற்று வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளமாக இருந்த…

கடலை மாவு இருக்கா? அப்ப இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசை, பூரிக்கு செமயா இருக்கும்..

Posted by - December 12, 2023 0
காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? எப்போதும் காலையில் இட்லி, தோசை சாப்பிடுவது சரி, அதற்காக சைடு டிஷ் கூட ஒரே மாதிரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *