அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

78 0

அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர்

கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.

திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

பணியாளர்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறை

தமிழ்நாடு முதலமைச்சர் பணியாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதால் இவர்கள் தொடர்ந்து பணிபுரிய அறிவுறுத்தினார்கள். அதனால் அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவி பேராசிரியர்கள் (Teaching Fellows) முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • மீண்டும் உடனடி நியமனம், பணி நீட்டிப்பு ஆணை வழங்குதல்.
  • ஜனவரி மாதத்திற்கான ஊதிய இழப்பை வழங்குதல்
  • நீதிமன்ற உத்தரவை உடனடியாக பின்பற்றி ஊதிய உயர்வு மற்றும் அனுபவ சான்றிதழ் வழங்கல்.
  • அடிப்படை தேவைகளான ESI, EPF, மருத்துவ காப்பீடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துதல்.
  • பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பணிக்கொடை மற்றும் ஈமச்சடங்கு நிதி வழங்கிட வேண்டுதல்.
  • கல்வித் தரத்தை பாதிக்கும் நடைமுறைகளை நிறுத்தல்
  • UGC விதிமுறைகளின்படி ஊதிய திருத்தம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

Related Post

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

Posted by - February 25, 2026 0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது…

திமுகவின் மெகா பிளான்…

Posted by - December 17, 2025 0
கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பாஜக…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Posted by - February 27, 2026 0
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன்…

தினகரனை வரவேற்கிறேன்” – இபிஎஸ்

Posted by - January 21, 2026 0
சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *