இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் காட்டாதீர்கள் : குஷ்பு காட்டம்

304 0

குஷ்புவுக்கு எதிராக போராட்டம் வலுத்துவரும் நிலையில், இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் என அவர்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகர் குஷ்பு, சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சைப் போட்டால் திமுக-வுக்கு அவர்கள் வாக்களிப்பார்களா?” என பேசினார். இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குஷ்புவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மை மற்றும் குஷ்பு படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் குஷ்புவின் உருவப்படத்தை திமுகவினர் எரித்தனர். சிவகங்கையில் குஷ்புவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்த போது, எதிர்பாராதவிதமாக திமுக எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமாரின் சேலையில் நெருப்பு பற்றிக் கொண்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகிலும் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

தருமபுரி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குஷ்புவை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் வலுத்தன.

திசை திருப்பும் வேலையில் திமுக”

இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள குஷ்பு, இதுபோன்ற பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் எனக் கூறிmaயுள்ளார். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது எல்லாம் திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது என்றும் குஷ்புவின் டிஎன்ஏவில் கிடையாது எனவும் தெரிவித்தார்.  தான் தவறு செய்தால், குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக் கேட்பேனே தவிர பயந்து ஓடமாட்டேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

தான் பேசியதை தவறான அர்த்தம் எடுத்துக்கொண்டு அதை மட்டும் மக்களிடம் எடுத்துக் காட்டி, அவர்களை திசைதிருப்பும் வேலையை திமுகவினர் செய்வதாகவும் எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் எனக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் பேசிய பழைய காணொலிகளையும், ட்வீட்களையும் எடுத்துப் போடுவது திமுகவின் டிஎன்ஏ என விமர்சித்த குஷ்பு, நடப்பு பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு  அவர்களிடம் ஏதும் இல்லை என்றார்

தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக டாஸ்மாக் எண்ணிக்கையை குறைத்தால், அவர்கள் பல ஆயிரங்களை சேமித்து, அவர்களது குடும்பங்கள் நல்லபடியாக இருக்கும் என்பதையே தான் கூறியதாகவும் இந்த விஷயத்தை திசைத்திருப்பி, பெண்களை கேவலப்படுத்தியது போல நான் பேசியதாக திமுகவினர் கூறுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

தைரியமாக பேச வேண்டிய விஷயங்களை முன்வைத்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் எனக்கு சொல்லிக்கொடுத்தது, என்னுடைய ஆசான் மறைந்த முதல்வர் கருணாநிதி என்று குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார்.

பெண்களை சமூகத்தின் நல்ல இடத்தில் வைத்து அழகுபார்க்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என குஷ்பு தனது வீடியோவில் பேசியுள்ளார்.

Related Post

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…

எதிர்பாராததை எதிர்பாருங்கள் – பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை கங்கனா..!!

Posted by - March 26, 2024 0
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா போட்டியிடவுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை…

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…

ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்

Posted by - June 2, 2025 0
அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது என்றும் ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது என எடப்பாடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *