பாத்துட்டே இருங்க எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போகிறேன் – நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி..!

186 0

எதிர்வரும் மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள மன்சூர் அலிகான் தற்போது தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் .

இந்நிலையில் வேலூர் பெங்களூரு சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு இன்று சென்ற மன்சூர் அலிகான், அங்கு மீன்களை வாங்க வந்த மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் கூறியதாவது :

பிற கட்சிகளில் உள்ளதை போல் எனக்காக யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் யாருக்கும் ஏ – டீமாகவோ அல்லது பீ டீமாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எல்லோருக்கும் நான் வேட்டு வைக்கப் போவதை பொருத்திருந்து பாருங்கள் .பெட்ரோல் , டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைப்பேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதை ஏன் வாக்குறுதியாக கொடுக்கிறீர்கள். ஆட்சியில் இருக்கும்போதே செய்யலாமே தேர்தல் வந்தால் தான் மக்களின் துயரம் அனைவருக்கும் தெரியுமா என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இறுதியில் மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

Related Post

அதிமுக – பாஜக கூட்டணிக்கு தவெக வருமா? – ‘நல்லதே நடக்கும்’ என நயினார் நாகேந்திரன் விளக்கம்

Posted by - June 28, 2025 0
அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வருமா என்ற கேள்விக்கு, நல்லதே நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம்…

“செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *