தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இ.பி., சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரம் செய்தார்.
அப்போது விதிமுறைகளை மீறி சின்னம் பொறிக்கப்பட்ட பதாகைகள், தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் வினோத்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதையடுத்து, மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வட்டச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் மீது கோட்டை காவல் நிலைய போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.