1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார். தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார்.
திமுக இலக்கிய அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான இந்திர குமாரி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் , சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவரின் கணவர் வழக்கறிஞராவார். இவருக்கு லேகா என்ற ஒரு மகள் உள்ளார். 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார். தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார்.
தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இந்திரகுமாரி 2006-ல் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பதவியை வழங்கி அழுகுபார்த்தது திமுக.
உடல்நலக்குறைவால் காலமான இந்திரகுமாரிக்கு, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திமுகவின் இலக்கிய அணி தலைவர் புலவர் இந்திர குமாரி மறைவு செய்தி தம்மை சோகத்தில் ஆழ்த்தியதாகவும், நெடிய அரசியல் அனுபவம் கொண்ட புலவர், மக்கள் பணியாற்றியாற்றியவர் என்றும் நினைவு கூர்ந்துள்ளார். புலவர் இந்திர குமாரியின் மறைவு திமுகவுக்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு என்றும் முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். இதற்கிடையே சென்னை அடையாறு காந்திநகரில் வைக்கப்பட்டுள்ள புலவர் இந்திர குமாரியின் உடலுக்கு திமுக மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிச்சடங்குகள் பெசன்ட் நகரில் இன்று நடைபெற இருக்கின்றன.