இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

196 0

பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கேரள அரசு தடை வித்தித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது.

ஏன் அரளி தடை செய்யப்பட்டது ?

கேரளாவில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, சூரியா சுரேந்திரன் என்கிற 24 வயது செவிலியர் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்த போது அதற்கு காரணம் அரளி பூ என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

சூரியாவுக்கு லண்டனில் வேலை கிடைத்திருந்தது. அதன்படி அவர் ஏப்ரல் 28 ஆம் தேதி லண்டனுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் அழைப்பு வரவே, சூரியா போனில் பேசிக்கொடிருந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார்.

அதன் பிறகு வாந்தி, மயக்கம் என சூரியாவின் உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.சூரியா உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவர்களிடம், தான் அரளி பூ மற்றும் அதன் இலைகளை வாயில் போட்டு மென்றதாக கூறியுள்ளார். இந்நிலையில் அவர் உயிரிழந்த பிறகு அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர், அரளி பூ விஷத்தால் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.ஆயுர்வேத மருத்துவத்தில் அரளி பூ பயன்படுத்தப்பட்டாலும் அது மிகவும் விஷ தன்மை வாய்ந்தது என உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எரிந்த அரளி பூவின் புகையை சுவாசித்தால் கூட அது விஷமாக மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.எனவே கேரள அரசு கோயில்களில் அரளி பூக்களை பயன்படுத்த தடை வித்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

உ.பி.யில் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு: அதிக வெப்பம் காரணமா?

Posted by - June 19, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். மருத்துவமனையில சிகிச்சை…

”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Posted by - December 11, 2024 0
Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை என, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ”பாராசிட்டமால்…

சராசரி மக்களுக்கு ஏற்ற மலிவு கார் எது?

Posted by - January 6, 2026 0
இந்தியாவில் தற்போது கிடைக்கும் குறைந்த விலை Top 5 கார்கள் – முழு விவரம் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் பட்ஜெட்…

வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

Posted by - December 27, 2022 0
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Posted by - December 11, 2025 0
நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *