CM Vijay Assembly Speech: திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகியுள்ளது.
CM Vijay Assembly Speech: திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிஎம் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதனை ஏற்காமல் உதயநிதி தலைமையில் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் சட்டப்பேரவையில் பேசிய விஜய், ஒரு குட்டிக்கதை சொல்ல தோன்றுகிறது சொல்லலாம என கேட்க சபாநாயகர் அனுமதி கொடுத்தார். அதன்படி, ”ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் பெரியர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக்கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என கேட்டான். அதற்கு ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் என சொன்னார்கள். என தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்” என சொன்னாராம் என தனது குட்டிக்கதையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.
ஸ்டாலினை சீண்டிய விஜய்
தொடர்ந்து பேசுகையில், “இல்ல எங்களுக்கும் இப்படி நக்கல் நையாண்டியாக சம்மந்தம் சம்மந்தமே இல்லாமல் குட்டிக்கதை சொல்ல எங்களுக்கும் தெரியும். அந்த கதையில் பெரியவர் அப்படி சொன்னார். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதற்காக யாரும் டென்ஷனாக வேண்டாம். ஐந்து நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் கண்டுள்ளது. பேசு பேசு என்றால் நான் வேறு என்ன செய்வது.
பழச மறந்துட்டீங்களா?
தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு இதுவரை சட்டமன்ற வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை என கூறுகின்றனர். மரபையே மாற்றிவிட்டீர்கள் என பெரிய போரை போன்று பேசினர். அந்த மாநில உரிமை போராளிகளை, மரபு காக்கிற போராளிகளை ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். 2021, ஆகஸ்ட் 2ம் தேதி நினைவிருக்கிறதா? தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் புகைப்படம் குடியரசு தலைவரால் திறக்கப்பட்டது. அப்போது தேசிய கீதத்திற்கு அடுத்ததாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதோடு நிகழ்ச்சியின் முடிவில் இரண்டாவது முறையாகவும் தேசிய கீதம் பாடப்பட்டது. அதுவும் முத்தமிழறிஞர் என சொல்லப்படும் கலைஞரின் புகைப்பட திறப்பு விழாவில், அவர் இருந்த இதே சபையில் தமிழ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அது யார் என நியாபகம் இருக்கா? இதெல்லாம் கேட்டால் அது குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி அப்படி தான் இருக்கும். அதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது என்பார்கள்” என முதலைச்சர் விஜய் பேசினார்.