vijay 1

CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..!

40 0

CM Vijay Assembly Speech: கடந்த 2017 தொடங்கி 2026 ஏப்ரல் மாதம் வரை ஆண்ட புண்ணியவான்களின் ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் போட்ட ஓட்டைகளை அடைத்துக்கொண்டு இருப்பதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

CM Vijay Assembly Speech: தவெக ஆட்சிக்கு தேதி குறிப்பவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என, முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் உரை:

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், “பல வருடங்களாக இருக்கும் பதவி வெறி பிடித்த அரசியலை உடைத்து இந்த விஜய் எப்படி செயல்படுவார் என நமது மக்களே சிந்தித்து இருப்பார்கள். ஆனால் அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என மக்கள் 40 நாட்களில் அறிந்து இருப்பார்கள். இது வெறும் தொடக்கம் மட்டும் தான். மாபெரும் சபையில் இருந்து கேட்கிறேன், மக்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். 2017ம் ஆண்டு கடைசியில் இருந்து 2026 ஏப்ரல் மாதம் வரை ஆண்ட இருந்த புண்ணியவான்களின் ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் போட்ட ஓட்டைகளை அடைத்துக்கொண்டே, படிப்படியாக மக்களுக்கும் நல்லது செய்துகொண்டு வருவோம். இதனால் தான் நமக்கு எதிராக யார் யாரும் சேரவே மாட்டார்கள் என நினைத்தோமோ, அவர்கள் எல்லாம் ஒன்றாக சேருகின்றனர். நம்ம ஆட்சிக்கு தேதி குறிக்கிறார்கள். அவர்களை மக்களே பார்த்துக்கொள்வார்கள்.

 

திமுகவால் தொல்லையோ தொல்லை..

தமிழ்நாட்டின் கருவூலம் எப்படி திசைமாறி, உருமாறி தேய்ந்து ஓய்ந்து என வசனம் மாதிரி ரைமிங்காக இல்லாமல் வளமான இலக்கியமாக இதே சபையில் பேசிய ஆட்சியாளர்கள் நடத்திய நிதிமேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். அதுமுதல் கண்ணை கட்டுதிங்க. அந்த காலத்தில் தான் பிள்ளையோ பிள்ளை, தொல்லையோ தொல்லை என சொன்னார்கள். அதே மாதிரி தான் அவர்களுடைய ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு தொல்லையோ தொல்லை. இப்படி ஒரு நிலைமையை உருவாக்கி வைத்துவிட்டு இவர்கள் சொல்கிறார்கள் நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்று.

”தவெக எம்.எல்.ஏக்களுக்கு தெரியாதுங்க..”

நமது அமைச்சர்களுக்கும், நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றும் தெரியாது என சிலர் விமர்சிக்கின்றனர். ஆமாங்க, எங்களுக்கு தெரியாது தான். எங்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு, மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது தான். டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவிற்கு அதன் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது தான். பதவி உயர்வு வழங்கவும், பணியிட மாற்றம் கலந்தாய்வு நடத்தவும் தெரியுமே தவிர அதற்காக பணம் பறிக்க தெரியாது தான். பணியிடங்களை உருவாக்க தெரியுமே தவிர, அவற்றை பணத்திற்கு விற்க தெரியாது தான். கோயில்களில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை நடக்க தெரியுமே தவிர, கோயில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது தான். தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது தான். கனிம வளத்தை பாதுகாக்க தெரிந்த அளவிற்கு, கொள்ளையடிக்க தெரியாது தான். அரசு வருமானத்தை அரசு கஜானாவிற்கு மாற்ற தெரிந்த அளவிற்கு தனிப்பட்ட கஜானாவிற்கு மாற்ற தெரியாது தான். போதை கலாசாரத்தை தடுக்க தெரிந்தவர்களுக்கு, அதை வளர்க்க தெரியாது தான். குடும்பத்தில் இருக்கும் பெண்களை மதிக்க தெரிந்தவர்களுக்கு ஒசி பஸ், ஆயிரம் ரூபாய் கேஸ் இப்படி எல்லாம் பேச தெரியாது தான்.

மக்கள் சேவை தெரிந்த அளவிற்கு சுயநலத்திற்காக உழைக்க தெரியாது. அதனால் தான் எங்களை பார்த்து எதுவும் தெரியாது என சொல்பவர்களுக்கு சொல்கிறோம். உங்களை போன்று முறைகேடு செய்வதை நாங்கள் தெரிந்துகொள்ள போவதில்லை. தெரிந்துகொள்ள ஆசைபடவும் இல்லை. அது கடைசி வரையில் தெரியாமலே இருக்கட்டும். அதனால் நாங்களும் எங்கள் மக்களும் ரொம்ப மகிழ்ச்சி தான்” என முதலமைச்சர் விஜய் சரமாரியாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்தார்.

Related Post

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…
Generated Image November 22 2025 5 37PM

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க..

Posted by - January 9, 2024 0
உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற…

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

Posted by - January 19, 2025 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *