Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

161 0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது தமிழக அரசு. கடந்த 2,3 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12,264 பேரில், 3,665 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 9,367 பேரில், 1171 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 7,998 பேரில், 1,278 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொசு உற்பத்தியாகும் இடங்களில் நகராட்சி நிர்வாகத்துடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் நீர் நிலையங்கள், குட்டைகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் வீட்டின் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். டெங்கு பரவாமல் இருக்க மாவட்டந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Post

கரு உருவாக்கும் கருவளர்ச்சேரி ..

Posted by - September 21, 2023 0
ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர…

குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் அதிமுகவினர் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

Posted by - October 17, 2024 0
நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை என அமைச்சர் சேகர்…

தூத்துக்குடி மாவட்ட மக்களின் கவனத்திற்கு…

Posted by - December 21, 2023 0
தூத்துக்குடி: வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின்…
Gemini Generated Image gb5pfsgb5pfsgb5p

“எத்தகைய வெட்கக்கேடு?” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

Posted by - March 20, 2026 0
தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பின்னணி தூத்துக்குடி மாவட்டம்…

திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் – அன்புமணி தேர்தல் பரப்புரை..!!!

Posted by - April 12, 2024 0
திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *