எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

127 0

தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன..

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த குற்றம், சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வந்த தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக ஆகச்சிறந்த எதிர்க்கட்சியாகக் காத்திரத்துடன் செயல்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெனிக்ஸ் கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் என மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு திமுக பல்வேறு போராட்டங்களை அறிவித்து வந்தது. திமுகவுடன் சமூக ஆர்வலர்களும் திரை நடிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்திலேயே நிகழ்ந்த கொடூரம்

இந்த நிலையில், நாட்டின் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த அதிர்ச்சி சற்றே குறையும் முன்பாகவே, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியானது. அது எப்படி? குற்றவாளி, அந்த சாருடனும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில், அந்த சார் யார்? அமைச்சர்கள் யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் என்று கேள்வி எழுந்துள்ளது. குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டு விட்டதாக திமுக அரசு பதிலளித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டாமா?

எனினும் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்  நின்ற தமிழ் திரையுலகினர் இப்போது ஏன் அமைதி காக்கின்றனர் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, நயன்தாரா உள்ளிட்டோர் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. கமல்ஹாசன் சார்பில் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருந்தார். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர்த்து, பிற கூட்டணிக் கட்சியினர் யாரும் வலுவான கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை.

அமைதிக்கு என்ன காரணம்?

திரையுலகினரின் அமைதிக்கு என்ன காரணம்? ஆளும் கட்சி திமுக என்பதாலா? அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்ற சொல்லப்படுவதாலா என்று நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் , மோகன் ஜி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்படும் ஆலை கழிவுகளால் 10 கி.மீ. சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிப்பு

Posted by - July 8, 2023 0
பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 2700 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்த…

விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி..

Posted by - March 11, 2026 0
விஜய் குறித்து நான் பேச வேண்டிய நிலை வந்தால் தயார் என தன் மீதான் விமர்சனங்களுக்கு இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார். விஜய் விவகாரம்…

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - January 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் – ஆவேசமான அமைச்சர்!

Posted by - October 15, 2024 0
ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம்…

கோவில்:நாச்சியார்கோவில் அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்….

Posted by - June 5, 2024 0
திருவிழா: வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன்  அருளாசி வழங்குகிறாள். தல சிறப்பு:…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *