Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

155 0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது தமிழக அரசு. கடந்த 2,3 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12,264 பேரில், 3,665 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 9,367 பேரில், 1171 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 7,998 பேரில், 1,278 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொசு உற்பத்தியாகும் இடங்களில் நகராட்சி நிர்வாகத்துடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் நீர் நிலையங்கள், குட்டைகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் வீட்டின் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். டெங்கு பரவாமல் இருக்க மாவட்டந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Post

எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

Posted by - December 31, 2024 0
தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது…

மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

Posted by - December 15, 2023 0
திண்டுக்கல்: லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு…

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு…

கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் – விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Posted by - March 6, 2025 0
பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி…

கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

Posted by - July 29, 2023 0
கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *