exit poll

Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்?

190 0

Exit Poll Results 2026: தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் திருவிழா நாளையுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நாளையுடன் முடிவையும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிலவரம் 

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4  முனை போட்டி நிலவியது தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியது. ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை தொடங்கி வேட்பாளர் அறிவிப்பு வரை எதிர்பாராத திருப்பங்கள் நடந்தது.

தமிழ்நாட்டிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவிகிதம் வாக்கு பதிவானது. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி, மேற்கு வங்கம் என அங்கும் கடந்த முறையை விட வாக்கு சதவிகிதம் எதிர்பாராத மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. இது அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவானது. குறைந்தப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 69 சதவிகித வாக்கு பதிவானது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நிலவரம் 

பொதுவாக தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னர் ஒரு கருத்து கணிப்பு ஊடகங்கள் தொடங்கி தனியார் அமைப்புகள் வரை மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படும். அது மக்களின் மனதை பிரதிபலிப்பதாக இருக்கும் என சொல்லப்படும். ஆனால் அவை தேர்தல் களத்தில் எதிரொலிப்பதில்லை. கடைசி நேரத்தில் கூட வாக்கு செலுத்தும் மக்களின் மனது மாறும். அதேபோல் பெரும்பாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வாக்கு எண்ணிக்கை  முடிவுகளை ஒத்து போயிருக்கும்.

அந்த வகையில் மேற்கு வங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் 5 மாநில தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகவுள்ளது. இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் 

தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அசாம், கேரளா, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதியும், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ம் தேதியும், அதே நாளில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறவுள்ளது.  5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Related Post

election 2026

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல்: மே.4ல் வாக்கு எண்ணிக்கை

Posted by - March 15, 2026 0
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை…
Gemini Generated Image gywpqbgywpqbgywp e1773396970165

பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன?

Posted by - March 13, 2026 0
திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK Rajiv Gandhi: திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி,…
Gemini Generated Image q70qvaq70qvaq70q

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர் கைது..

Posted by - April 9, 2026 0
நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு சங்​கரை சென்னை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான…
vck

ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளையை சீராட்டி வளர்க்க போயிருக்கிறாரா? – திருமாவுக்கு எதிராக விசிகவுக்குள்ளேயே வெடிக்கும் விமர்சனம்

Posted by - May 24, 2026 0
‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை’ என்று விசிக தலைவர் திருமாவளவன் விவரித்திருக்கும் நிலையில், “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைதான் விஜய்…
Generated Image November 17 2025 11 32AM

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025 0
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *