%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95 %E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F

TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!

34 0

’திமுக என்ன செய்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அவர்கள் பாணியிலேயே திருப்பிக் கொடுப்போம் என தவெக எம்.எல்.ஏக்கள் பேசியதால் சட்டமன்றமே சிறிது நேரம் களேபரமாகியது’

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மேகதாது அணைக்கு எதிராக அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து, அந்த தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.

இதுவரையில் அமைதியாக சென்ற சட்டமன்றத்தில் இதன்பின்னர் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியது.

என்ன நடந்தது சட்டமன்றத்தில்..?

விளாத்திக்குளம் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனாதான் ‘கொளத்தூரில் எங்கள் தலைவர் ஐந்து நிமிடம் பேசியதற்கே என்ன நடந்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியுற்றது குறித்து மறைமுகமாக அவர் பேச, உடனடியாக திமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் எழுந்து ‘நாம் இப்போது விவாதித்துக்கொண்டிருப்பது விளாத்திக்குளம் பாலியல் வன்கொடுமை தொடர்பான விஷயம். இதில் எதற்கு கொளத்தூர் பற்றி இழுக்கின்றீர்கள்?’ என அவர் கேட்க, திமுக உறுப்பினர்கள் சிலர் தங்கள் தலைவர் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று குரல் கொடுக்கத் தொடங்கினர்.  இதனை கண்ட தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக எழுந்து அப்படியே நின்று திமுகவினரை நோக்கி கத்தத் தொடங்கினர். இதனால் சட்டப்பேரவையே பரபரப்புக்கு உள்ளாகத் தொடங்கியது.

இருதரப்பிலும் சரமாறியாக வந்து விழுந்த சொற்கள்

அதன்பின்னர் திமுக – தவெக இரு தரப்பு எம்.எல்.ஏக்களும் சரமாரியாக ஒருவரை ஒருவர் பார்த்து கடுமையான வார்த்தைகளால் பேசத் தொடங்கியதால், அவையே களேபரமாகிப்போனது.

திமுகவினரை அடிக்க பாய்ந்தாரா தவெக எம்.எல்.ஏ ?

இந்நிலையில், அவையின் கடைசி வரிசையில் இருந்த சென்னையை சேர்ந்த தவெக எம்.எல்.ஏ ஒருவர் அங்கிருந்து கைகளை ஓங்கிக்கொண்டு திமுகவினரை தாக்குவது போன்று முன்னேற்றி வந்ததும் சட்டமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே நேரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் இருப்பதாக திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் பேசியதற்கும் தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் சபாநாயகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார்.

நீங்க என்ன பண்ணாலும் அதே மாதிரியான பதிலடி கிடைக்கும் – எச்சரித்த தவெகவினர்

இதனையடுத்து திமுகவினர் என்ன செய்தாலும் அதற்கு அமைதியாக இருக்க மாட்டோம். அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்போம் என தவெக எம்.எல்.ஏக்களும் உரத்த குரலில் பேசினர். இதனால் மீண்டும் அவையில் சலசலப்பு சற்று நேரம் ஏற்பட்டு அமைதியடைந்தது.

Related Post

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு

Posted by - November 4, 2023 0
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு…

அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை குறையும் பாருங்க.. செம ஜூஸ்

Posted by - November 10, 2023 0
சென்னை: அரசாணிக்காய் இருந்தால் போதும்.. அல்சரை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.. அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டதுதான் இந்த அரசாணிக்காய். அரசாணிக்காயை, பெரும்பாலும் பரங்கிக்காய் என்பார்கள்.. சாம்பல் பூசணி,…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Posted by - May 8, 2023 0
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *