IPL 2024 : 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பஞ்சாப் கிங்ஸ்…

264 0

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்க்ததில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் இறங்கினர். பொறுமையாக விளையாடிய ரஹானே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும், ரவிந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுத்து வெளியேறினர். சமீர் ரிஸ்வி 21 ரன்கள் சேர்த்தார்.விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களும், ரிலீ ரூசோ 43 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். ஷஷாங்க் சிங் 25 ரன்களும், சாம் கரன் 26 ரன்களும் சேர்க்க 17.5 ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது.

Related Post

“நாங்கள் செய்த ‘அந்த’ தவறு…” – இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா சொன்ன காரணம்!

Posted by - November 20, 2023 0
ICC World Cup 2023 : 2003-ஆம் ஆண்டைப் போல, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்களின் கோப்பை கனவு சுக்கு நூறாக உடைந்தது.…

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு

Posted by - November 15, 2025 0
CSK Trade: சஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. CSK Trade: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக…

பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?

Posted by - June 29, 2024 0
 இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று…

ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

Posted by - December 4, 2025 0
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 14 ரன்களிலும், யசஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *