tnassembly

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றுகிறார்

0 0

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​கிறது. ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சட்​டப்​ பேர​வை​யில் முதல் முறை​யாக உரையாற்றுகிறார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் ஆளுநர் உரையுடன் தொடங்​கு​வது வழக்​கம். அதன்​படி கடந்த ஜனவரி மாதம் அப்​போதைய ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலை​மை​யில் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​ப​டாததை சுட்​டிக்​காட்​டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேர​வை​யில் வாசிக்​காமல் வெளி​யேறி​னார். அதன்​பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்​டுமே பேர​வைக் குறிப்​பில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அப்​போதைய பேர​வைத் தலை​வர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்​தார்.

அதற்​குப் பிறகு சட்​டப்​பேர​வைப் பொதுத்​தேர்​தல் நடை​பெற வேண்​டிய நிலை​யில், அப்​போதைய திமுக அரசு இடைக்​கால பட்ஜெட் தாக்​கல் செய்​தது. சட்​டப்​பேர​வைப் பொதுத் தேர்​தல் முடிந்​து, தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், விசிக, இந்​திய கம்யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், ஐயுஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன், முதல்​வ​ராக தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பொறுப்​பேற்​றார்.

இதையடுத்​து, 17-வது சட்​டப்​பேரவை அமைக்​கப்​பட்​டது. தற்காலிகப் பேர​வைத் தலை​வர் கருப்​பையா முன்​னிலை​யில் சட்டப்​பேரவை உறுப்​பினர்​கள் உறு​தி​மொழி ஏற்​றனர். அதன்​பின், பேர​வைத் தலை​வ​ராக ஜே.சி.டி.பிர​பாகர் மற்​றும் துணைத் தலைவ​ராக ரவிசங்​கர் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர். மே.13-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு பெரும்​பான்​மையை நிரூபித்​தது. முதல்​வர் விஜய் தலைமையி​லான அமைச்​சர​வை​யில் காங்​கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களுக்​கும் இடம் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கு​கிறது. முன்​ன​தாக, ஆளுநர் அர்​லேகரை சமீபத்​தில் சந்​தித்த பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், பேரவை​யில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்​தார்.

இதையடுத்து காலை 9.55 மணிக்கு ஆளுநர் அர்​லேகர் தலை​மைச் செயல​கம் வரு​கிறார். அவரை, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் மற்​றும் பேர​வை​யின் புதிய செயலர் ஆர்​.​சாந்தி ஆகியோர் பூங்​கொத்து கொடுத்து வரவேற்​கின்​றனர். அதன்​பின், காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் முதல் முறை​யாக தமிழக சட்​டப்​பேர​வை​யில் உரை​யாற்​றுகிறார். ஆளுநரின் ஆங்​கில உரையைத் தொடர்ந்​து, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் தமிழ் உரையை வாசிப்​பார். அதன்​பின், பேர​வை​யின் இன்​றைய நிகழ்​வு​கள் முடிவுறும்.

Related Post

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

Posted by - May 1, 2026 0
கோவையில் திமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜி கரூரில் இருந்து தனது ஆதரவாளர்களை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. .சட்டமன்ற…
Gemini Generated Image gzfucmgzfucmgzfu

மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.

Posted by - April 9, 2026 0
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற…
mks scaled

MK Stalin: சேம் கான்செப்ட்..! ஸ்டாலின் அறிக்கை வைரல்

Posted by - June 17, 2026 0
MK Stalin TN Finance: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை தொடர்ந்து, 2021ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை…

அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? – அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!

Posted by - December 20, 2024 0
 “மதத்தின் பெயரால் அரசியல் செய்யலாம்” என்கிறார் அமித் ஷா. மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துக்கள் அமைந்திருப்பதால் அவரை இழிவு செய்கிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அம்பேத்கரை அவமதித்த…

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

Posted by - December 30, 2025 0
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *