tnassembly

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றுகிறார்

72 0

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​கிறது. ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சட்​டப்​ பேர​வை​யில் முதல் முறை​யாக உரையாற்றுகிறார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் ஆளுநர் உரையுடன் தொடங்​கு​வது வழக்​கம். அதன்​படி கடந்த ஜனவரி மாதம் அப்​போதைய ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலை​மை​யில் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​ப​டாததை சுட்​டிக்​காட்​டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேர​வை​யில் வாசிக்​காமல் வெளி​யேறி​னார். அதன்​பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்​டுமே பேர​வைக் குறிப்​பில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அப்​போதைய பேர​வைத் தலை​வர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்​தார்.

அதற்​குப் பிறகு சட்​டப்​பேர​வைப் பொதுத்​தேர்​தல் நடை​பெற வேண்​டிய நிலை​யில், அப்​போதைய திமுக அரசு இடைக்​கால பட்ஜெட் தாக்​கல் செய்​தது. சட்​டப்​பேர​வைப் பொதுத் தேர்​தல் முடிந்​து, தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், விசிக, இந்​திய கம்யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், ஐயுஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன், முதல்​வ​ராக தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பொறுப்​பேற்​றார்.

இதையடுத்​து, 17-வது சட்​டப்​பேரவை அமைக்​கப்​பட்​டது. தற்காலிகப் பேர​வைத் தலை​வர் கருப்​பையா முன்​னிலை​யில் சட்டப்​பேரவை உறுப்​பினர்​கள் உறு​தி​மொழி ஏற்​றனர். அதன்​பின், பேர​வைத் தலை​வ​ராக ஜே.சி.டி.பிர​பாகர் மற்​றும் துணைத் தலைவ​ராக ரவிசங்​கர் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர். மே.13-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு பெரும்​பான்​மையை நிரூபித்​தது. முதல்​வர் விஜய் தலைமையி​லான அமைச்​சர​வை​யில் காங்​கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களுக்​கும் இடம் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கு​கிறது. முன்​ன​தாக, ஆளுநர் அர்​லேகரை சமீபத்​தில் சந்​தித்த பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், பேரவை​யில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்​தார்.

இதையடுத்து காலை 9.55 மணிக்கு ஆளுநர் அர்​லேகர் தலை​மைச் செயல​கம் வரு​கிறார். அவரை, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் மற்​றும் பேர​வை​யின் புதிய செயலர் ஆர்​.​சாந்தி ஆகியோர் பூங்​கொத்து கொடுத்து வரவேற்​கின்​றனர். அதன்​பின், காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் முதல் முறை​யாக தமிழக சட்​டப்​பேர​வை​யில் உரை​யாற்​றுகிறார். ஆளுநரின் ஆங்​கில உரையைத் தொடர்ந்​து, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் தமிழ் உரையை வாசிப்​பார். அதன்​பின், பேர​வை​யின் இன்​றைய நிகழ்​வு​கள் முடிவுறும்.

Related Post

’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

Posted by - September 22, 2025 0
‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’ தமிழக…
wert

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - March 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…
sss 2

சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் – வதந்தி வாய்கள்

Posted by - March 21, 2026 0
தவெக தலைவர் விஜய் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிஷுட்டிங்கிற்காக மும்பை சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறப்படுகிறது. TVK Vijay: இயக்குனர் அட்லி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…
ops 2

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

Posted by - February 27, 2026 0
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…

தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

Posted by - December 7, 2024 0
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *