கோவையில் திமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜி கரூரில் இருந்து தனது ஆதரவாளர்களை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
.சட்டமன்ற தேர்தலையொட்டி கோவையில் திமுக சார்பில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் பட்டுவாடா படுஜோராக நடைபெற்றது.
இதனிடையே கோவை நிர்வாகிகள் பட்டுவாடா பணத்தில் பெருமளவை சுருட்டுக் கொண்டதாக புகார் எழுந்தது. மேலும், பணம் கிடைக்காத பெண்கள் செந்தில் பாலாஜியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி பணப் பணப்பட்டுவாடாவில் கை வைத்தது யார் என்பதை கண்டறிய கரூரில் இருந்து தனது ஆதரவாளர்களை இறக்கியுள்ளார்.
அவர்கள் எந்தெந்த பகுதிகளில் பணம் சரியாக செல்லவில்லை என்பதை கண்டறிந்து செந்தில் பாலாஜிக்கு அறிக்கை அளிப்பார்கள் என கூறப்படுகிறது. திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டது மட்டுமின்றி பணத்தை சுருட்டு கொண்டவர்களை கண்டறிய குழு அமைத்துள்ளது கேலி கூத்தாகியுள்ளது.