TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?

106 0

டிவிஎஸ் தனது புதிய இ ஸ்கூட்டர் TVS Orbiter 1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரிக்கு சந்தா செலுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற மின்சார ஸ்கூட்டர்கள் மின்சார வாகன உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் தனது மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

Orbiter V1:

இந்த நிலையில், டிவிஸ் நிறுவனம் நேற்று சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள புதிய இ ஸ்கூட்டர் Orbiter V1. இந்த இ ஸ்கூட்டர் 1.8 கிலோவோட் பேட்டரி கொண்டது. இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 86 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். Orbiter V2 இ ஸ்கூட்டரில் 3.1 கிலோவாட் பேட்டரி கொண்டது. இதை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.

விலை எப்படி?

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 86 ஆயிரம் ஆகும். அதேசமயம் பேட்டரி அஸ் எ சர்வீஸ் ( BaaS) என்ற திட்டத்தின் கீழ் பேட்டரிக்கான விலையை முழுமையாக செலுத்தாமல் பேட்டரி பயன்பாட்டிற்கு மட்டும் சந்தா செலுத்தலாம். இந்த திட்டத்தின் கீழ் இந்த புதிய இ ஸ்கூட்டரை 49 ஆயிரத்து 999 மட்டுமே செலுத்தி வாங்கலாம். இந்த திட்டம் மாதந்தோறும் ரூபாய் 862 மூலம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் 24 மாதங்கள், 36 மாதங்கள்  மற்றும் 60 மாதங்கள் வரை செலுத்தலாம்.

சிறப்புகள்:

14 இன்ச் சக்கரங்கள் முன்பக்கம், 12 இன்ச் சக்கரங்கள் பின்பக்கம்  உள்ளது. எல்சிடி கிளஸ்டர், மொபைல் ஆஃப், ஜிபிஎஸ் நேவிகேஷன், பாதுகாப்பு அம்சங்கள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. 34 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.

இந்த ஸ்கூட்டர் 2 வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. சாம்பல் மற்றும் வெள்ளி நிறத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் தினசரி நகரப் பயன்பாட்டிற்கு இந்த இ ஸ்கூட்டர் பயன்படுத்துவதற்கு சிறப்பானதாக அமையும் என்று கருதப்படுகிறது.

Related Post

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே மூன்று பெண்களை கற்பழித்த கும்பல்

Posted by - September 22, 2023 0
அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த…

சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?

Posted by - December 21, 2022 0
Coronavirus | இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து…

பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

Posted by - August 6, 2024 0
அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும்…

தினசரி பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டியது: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,076 ஆக உயர்வு

Posted by - March 8, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ந்தேதி 324 ஆக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *