இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்

89 0

திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடையும் சூழ்நிலையில், விடுமுறை நாளான இன்று முக்கிய அரசுத் துறை அதிகாரிகளை பணியாற்ற மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திமுக அரசின் இன்று கடைசி நாள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் , தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில்  தி.மு.க. தலைமையிலான அரசு கடந்த 7.5.2021 அன்று பொறுப்பேற்றது. கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஆட்சி இன்று (14-ந் தேதி) நிறைவடையும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், நாளை (15-ந் தேதி), தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்,  தற்போதுள்ள அரசு, காபந்து அரசாகிவிடும். எந்த வித புதிய திட்டங்களையோ, அரசு நலத்திட்டங்களையோ செயல்படுத்த முடியாது. மேலும் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது.

புதிய திட்டங்களை தொடங்க முடியாது

மேலும் தங்களுக்கு அரசு சார்பாக ஒதுக்கப்பட்ட வாகனங்களை தலைமைச் செயலகத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிட வேண்டும். தலைமைச் செயலகத்திற்கு வந்து அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்த முடியாது. ஏதாவது மிக முக்கிய பிரச்சினை என்றால் மட்டுமே அரசு உயர் அதிகாரிகளை முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். அடுத்த ஆட்சி அமையும் வரை தற்போது உள்ள அரசு காபந்து அரசாக மட்டுமே செயல்பட முடியும்,

இன்று பணிக்கு வர உத்தரவு

நாளைய தினம் (15-ந் தேதி) தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில்,  இன்றுதான்(14-ந் தேதி) இந்த ஆட்சியின் நிறைவு நாளாக இருக்கும். எனவே முக்கிய துறைகளின் அதிகாரிகளை, இன்று விடுமுறை நாளென்றாலும் வேலைக்கு மேலதிகாரிகள் வரவழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தற்போது நிலுவையில் உள்ள சில ஆணைகளுக்கான கோப்புகளை முடித்து வைக்கவும், கோப்புகளை நிலுவையில் வைக்காமல் இறுதி செய்யவும் அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அது சார்ந்த அதிகாரிகளை மட்டும் முக்கிய துறைகளின் மேலதிகாரிகள் இன்று பணியாற்றும்படி அழைத்துள்ளனர் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது.

Related Post

பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

Posted by - November 15, 2025 0
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்…

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…

இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை!

Posted by - January 5, 2026 0
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சம வேலைக்கு சம…

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

Posted by - February 25, 2026 0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது…

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - April 7, 2026 0
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *