அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் – ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

215 0

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் அமெரிக்காவின் சரிநிகர் வரி விதிப்பு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்:

ஒற்றுமை மற்றும் வலுவான எதிர்ப்பின் வெளிப்பாடாக, பிரிக்ஸ் நாடுகள் ஈரான் மீதான சமீபத்திய ராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஒருதலைப்பட்ச வர்த்தக வரிகளை அதிகரிக்கும் குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கூட்டத்தில், உலகளாவிய வர்த்தக சிக்கல்கள், ராணுவ அதிகரிப்புகள் மற்றும் தீவிரம் குறித்த தங்களது ஒத்த கவலைகளை வெளிப்படுத்தும் வகையில், ரியோ டி ஜெனிரோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஒரு கூட்டு அறிக்கையை பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்டன. புதியதாக இணைந்த எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டணி, அதிகரித்து வரும் பாதுகாப்புவாதத்தின் மீதான தாக்கம் குறித்து உறுதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

11 நாடுகள் சொல்வது என்ன?

கூட்டு அறிக்கையில், “வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பெருக்கம், அதன் கண்மூடித்தனமான வரி உயர்வு மற்றும் வரி அல்லாத நடவடிக்கைகள் போன்ற வடிவங்களில் இருந்தாலும் சரி… உலகளாவிய வர்த்தகத்தை மேலும் குறைக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நிச்சயமற்ற தன்மையை அறிமுகப்படுத்தவும் அச்சுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் (WTO) கொள்கைகளுக்கு எதிரான ஒருதலைப்பட்ச வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியது. தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய தலைவர்கள், விதிகள் அடிப்படையிலான, திறந்த மற்றும் உள்ளடக்கிய பலதரப்பு வர்த்தக முறைக்கு ஆதரவாக தங்கள் ஆதரவை அளித்தனர். WTO கட்டமைப்பிற்குள் வளரும் பொருளாதாரங்களுக்கு சிறப்பு மற்றும் வேறுபட்ட சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டம்:

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில், “பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உறுதி செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடுகளை நிராகரிக்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சர்வதேச முயற்சிகளை ஆதரித்து, சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுள்ளது. தீவிரவாதச் செயல்களின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு நியாயப்படுத்தலும் அவற்றை மன்னிக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம்:

ஜூன் 13 அன்று தொடங்கிய ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடர்பாகவும், பிரிக்ஸ் நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. அதில் இந்தத் தாக்குதல்களை சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் “தெளிவான மீறல்” என்று கூறிய பிரிக்ஸ், சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கண்காணிப்பின் கீழ் இயங்கும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் குறிவைக்கப்படுவது குறித்து கடுமையான கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதுபோக சர்வதேச பாதுகாப்புகளைத் தவிர்த்து, குற்றச் செயல்களுக்கு நிதியளிக்க தீவிரவாதக் குழுக்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் நாணயங்களை – கிரிப்டோகரன்சிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் பிரிக்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Post

பூமியை நோக்கி நாளை அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்.

Posted by - April 5, 2023 0
கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. ‘நாசா’ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன. வாஷிங்டன் : கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து…

இது புதிய வைரஸா..? இதுவும் கொரோனா போன்றதா..? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா..?

Posted by - January 7, 2025 0
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது கீழ் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை (சளி போன்றது) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக…

நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்

Posted by - June 24, 2025 0
இஸ்ரேலுடன் தற்போது வரை எந்தவித போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் தற்போது வரை எந்த…

2026 எப்படி இருக்கும்? : பகீர் கிளப்பும் கணிப்புகள்!

Posted by - December 31, 2025 0
புதிய வருடத்தில் உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழும், எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும், இயற்கை சீற்றங்கள் பேரழிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் பாபா வாங்கா என்ன…

ஆங்கில புத்தாண்டு – உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

Posted by - January 1, 2026 0
உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *