“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

238 0

ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இது குறித்து அவர்களே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர். பிரிந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தில் மீண்டும் இருவரும் இணைவார்கள் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்திருந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன் ஆரோக்கியமான உடல் + மகிழ்ச்சியான மனம் + மனித இதயம் = அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மந்திர மருந்து என்ற கேப்சனுடன் ஃபிட்னஸ் தொடர்பான கார்டு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில் தினமும் 9 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும், 8 மணிநேரம் தூங்க வேண்டும், 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், 6 நிமிடம் தியானம், 5 நேரங்களில் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும், 4 பிரேக் எடுக்க வேண்டும், 3 முறை ஆரோக்கியமான உணவு, நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும், தூங்கும் முன்பு 2 மணிநேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது, 1 முழு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர்கள் இணைவது தொடர்பாக ஏதேனும் பதிவிட்டிருப்பார் என எண்ணியதாகவும் அவர்களது பிரிவு கவலை அளிப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; கைதானவர் பற்றி பகீர் தகவல்

Posted by - December 25, 2024 0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும்…

சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

Posted by - February 14, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக…

தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?

Posted by - April 24, 2025 0
மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

Posted by - December 23, 2024 0
அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *