ஆங்கில புத்தாண்டு – உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

90 0

உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண ஒளிகளால் ஜொலித்தது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். அதேபோல அங்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிங்கப்பூரில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இணைந்து புத்தாண்டை வரவேற்றனர். அப்போது இடைவிடாது வெடித்த வாணவேடிக்கைகள் வானை வண்ணமயமாக்கின.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக, சிட்னி பாலத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஈஃபில் டவரில் இருந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயர் பகுதி திருவிழா போல காட்சியளித்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை இரவை பகலாக்கியது.

Related Post

இந்த மாத இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடுகிறது ஜப்பான்

Posted by - August 7, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Posted by - January 6, 2025 0
மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில்…

சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

Posted by - August 30, 2023 0
பெய்ஜிங்: காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள்…

கத்தார், ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; பதற்றத்தால் விமான சேவை பாதிப்பு

Posted by - June 24, 2025 0
கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!

Posted by - April 24, 2025 0
பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *