தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.!

108 0

தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளது பாஜக, அந்த வகையில் பிரம்மாண்ட மோடி பொங்கல் விழாவில் தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்கு தமிழகத்தை குறிவைத்து செயல்பட அமித்ஷா திட்டமிட்டு களம் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 100 முதல் 120 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதுஅந்தவகையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுக திட்டமிட்டு வருகிறதுஆனால் இதற்கு வாய்ப்பே கொடுக்க கூடாது என அதிமுக– பாஜக கூட்டணி காய நகர்த்தி வருகிறதுஅதில் மற்றொரு பக்கம் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய் இளம் தலைமுறை வாக்காளர்களை வைத்து மிரட்டி வருகிறார்இதுவரை பார்த்திராத தேர்தலாக தமிழக சட்டசபை தேர்தல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதுஅதிலும் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை.

40 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக

பல வருடங்களுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி உதவியோடு சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் நுழைந்துள்ளனர்இதை 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தை எட்ட முடிவு செய்துள்ளதுஅதற்கு ஏற்ப பாஜகவிற்கு சாதகமாக 40 தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே களப்பணியை தொடங்கியுள்ளதுஅதிலும் திமுக குறைந்த வாக்குகளில் வெற்றி பெற தொகுதிகளின் பட்டியலையும் எடுத்து வைத்து அலசி ஆராயந்து வருகிறதுஇந்த நிலையில் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என சபதத்தோடு களத்தில் இறங்கியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா,

4ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா

அதற்கு ஏற்ப தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளாராக தனது நம்பிக்கைக்குரிய நபரான பியூஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை நியமித்துள்ளார்இதனையடுத்து அதிமுக– பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனவரி 4-ந்தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாஅன்றைய தினம் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்‘ என்ற பாதையாத்திரை இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்இந்த ஆலோசனையில் திமுகவை வீழ்த்த எடுக்கப்படவுள்ள வியூகங்கள் தொடர்பாக கேட்டறிவதோடுஆலோசனையும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பு

இதனையடுத்து ஜனவரி 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்‘ நிகழ்ச்சியிலும் அமித்ஷா கலந்துகொள்ளவுள்ளார்காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் “மோடி பொங்கல்” விழாவில் பங்கேற்க பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவோ அல்லது நிகழ்ச்சிக்கு பிறகோ அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடுபாஜகவிற்கு தொகுதிகள் எத்தனைஓபிஎஸ்– டிடிவியை மீண்டும் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுஎனவே எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என உறுதியாக இருக்கும் அமித்ஷா, தித்திக்கும் பொங்கல் பண்டிகை முதல் அடுத்த 2 மாதங்களுக்கு தமிழகத்தை டார்கெட் செய்து களத்தில் இறங்க முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டார தகவல் கூறப்படுகிறது. 

Related Post

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…

#JUSTIN || தி.மு.க-வினர் OTP பெற தடை | #MaduraiHighCourt | #OTP | #DMK | #OraniyilTamilNadu | #pixeltv

Posted by - July 21, 2025 0
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் -வாக்காளர்களிடம் OTP பெறுவதற்கு நீதிமன்றம் தடை #DMK #CMMKStalin #OraniyilTamilNadu #HighCourt #Voters #Election2026 #TamilNews #JUSTIN || திமுகவின் ஓரணியில்…

ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

Posted by - March 31, 2026 0
விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் அச்சத்தை…

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

Posted by - March 19, 2026 0
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *