கத்தார், ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; பதற்றத்தால் விமான சேவை பாதிப்பு

158 0

கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள்  மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கத்தார், ஈராக்கில் தாக்குதல் நடத்திய ஈரான்

ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, தோகாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அல் உதெய்த்தில் அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஊடகம் கூறியுள்ளது. அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஒரு வெற்றிகரமான மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு ‘Blessing of Victory‘ என பெயரிடப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு, அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்க எத்தனை குண்டுகளை பயன்படுத்தியதோ, அதே அளவு குண்டுகளை தாங்களும் பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை, எங்களுடைய நட்பு மற்றும் சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் கிடையாது எனவும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரானுக்கு கத்தார் கண்டனம்

ஈரான் இவ்வாறு கூறினாலும், அந்நாடு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது.

கத்தார் பிரதமரின் ஆலோசகரும், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளருமான மஜத் அல் அன்சாரி, இத்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஈரான் நடத்திய தாக்குதல் இறையாண்மையின் அப்பட்டமான மீறல் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச விதிகளின்படி, ஈரான் நடத்திய அதே விதமான தாக்குதலை தாங்களும் நடத்த உரிமையுள்ளத என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஈரான் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இது மேலும் தொடர்ந்தால், அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதலால் தோகா விமான நிலையம் மூடல்

ஈரான் நடத்திய தாக்குதலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோகா விமான நிலையம் மூடப்படுவதாக கத்தார் அறிவித்துள்ளது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மீண்டும் விமான சேவைகள் தொடங்குவது குறித்து மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தோகா விமான நிலையம், பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கான இணைப்புப் புள்ளியாக இருப்பதால், விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அவ்வழியாக செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து 11 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்…

Posted by - May 7, 2025 0
இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியாவின் பிஐபி(PIB) மறுத்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது…

படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்.. கடுப்பான காதலி.. கத்திக்குத்தில் முடிந்த பிரேக் அப் பார்ட்டி.!

Posted by - January 21, 2023 0
படுக்கையிலேயே சிறுநீர் கழித்த ஆத்திரத்தில் இளைஞரை அவரது காதலி கத்தியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர்…

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted by - January 29, 2024 0
நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இன்றைய துரிதமான உலகில் உணவுப்…

பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் – என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - May 26, 2025 0
இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் துணை பாதுகாப்பு பிரச்னை மட்டுமே என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ”பாகிஸ்தானை வளர்த்துவிடும்…

மீண்டும் சீண்டும் பாக்., அமைச்சர் – ”எல்லையில் ஏதாச்சும் செய்வாங்க” கண்டுக்காத இந்தியா

Posted by - October 17, 2025 0
எல்லையில் இந்தியா மோசமாக செயல்படக் கூடும் என்பதால் பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக வேண்டும் என, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியுள்ளார். தாலிபன்கள் உடனான மோதலுக்கு மத்தியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *