“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

172 0

அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்.

“இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை கையில் பிடித்து விளையாடும் குழந்தை நான்” என்றும் தவெக மாநாட்டில் விஜய் உரையாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் எந்தவொரு குறிப்பு பேப்பர் இல்லாமல் எளிய நடையில் பேசியது கவனம் பெற்றுள்ளது.

வழக்கமாக அரசியல்வாதிகள் மேடையில் இருப்போரை வரவேற்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் இதனை தவிர்த்து, நேரடியாக மக்கள் பேசும் யதார்த்த மொழியில் பேசியது வரவேற்பை பெற்றது. முதன்முறையாக அரசியல் மேடையில் மைக்கை பிடித்த விஜய் பேசியதாவது:-

ஒரு குழந்தை முதன்முதலாக அம்மான்னு சொல்றப்ப அம்மாவுக்கு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க… அந்த சிலிர்ப்பு எப்படி இருந்துச்சுன்னு அந்த அம்மா கிட்ட கேட்டா அவங்களால தெளிவாக விளக்கி சொல்ல முடியும். ஆனா அந்த உணர்வு எப்படி இருந்துச்சுன்னு குழந்தை கிட்ட கேட்டா அந்த குழந்தைக்கு எப்படி சொல்ல தெரியும்?

குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசம் மாறாத வாயோட வெள்ளந்தியாக சிரிக்க மட்டும் தானே தெரியும். அந்த குழந்தை உணர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளால் சொல்ல தெரியாது. அப்படி ஒரு உணர்வோட தான் இப்ப நான் உங்க முன்னாடி நிற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அம்மா கிட்ட கூட தன்னோட உணர்வை சொல்ல முடியாத குழந்தைக்கு முன்னாடி ஒரு பாம்பு வந்து படம் எடுக்குதுன்னு வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? யார் முன்னாடி பாம்பு வந்து நின்னாலும் அலறி அடிச்சு ஓடுவாங்க….‘பாம்பை கண்டால் படையே நடுங்கும்’ என்று ஒரு பழமொழி இருக்கு. ஆனா அந்த குழந்தை என்ன செய்யும் தெரியுமா? தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட, கொஞ்சம் கூட அலட்டிக்காம அந்த பாம்பையும் சிரிச்சுக்கிட்டே தன்னுடைய கையில புடிச்சு விளையாட ஆரம்பிக்கும். அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இருக்காதா என்ற கேள்வியும் வரும். பாச உணர்வையே சொல்லத் தெரியாத அந்த குழந்தைக்கு பயம்னா மட்டும் எப்படி சொல்ல தெரியும்? இங்கு அந்த பாம்புதான் அரசியல். அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்” என்று விஜய் பேசினார்.மேலும் அரசியல் ஒரு போர்க்களத்தில் தொண்டர்கள் கவனமாக களமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.முன்னதாக மாநாடு மேடைக்கு வந்த விஜய் மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார். பிறகு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கொடியை ஏற்றினார். பிறகு தவெகவின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.தவெகவின் கொள்கையும் செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கட்சியின் கொள்கையை பேராசியர் சம்பத்குமார் அறிவித்தார்.

Related Post

பிரபாகரன் மகள் துவாரகா உருவம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது? சர்வதேச உளவு அமைப்புகள் சந்தேகம்

Posted by - November 28, 2023 0
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள்…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

அலப்பறை கிளப்புறோம்.. புஷ்பா 2 படத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

Posted by - December 6, 2024 0
புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. ஆனால் பட ரிலீசுக்கு முன்பு…

”கருணாநிதி காலத்து டெக்னிக், சோத்துல கல்லு” ஷூட்டிங் ஓவரா? ஸ்டாலினை நக்கலடித்த ஈபிஎஸ்

Posted by - April 11, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறைந்த கருணாநிதி காலத்து டெக்னிக்கை பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *