“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

145 0

தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார்.

தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை பகுதியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் பல்வேறு விஷயங்களை குறித்து பேசினார். அதில், தனது அரசியல் எதிரி யார் என குறித்தும் அவர் பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது; “இந்த ஊழல் இருக்கிறதே. அது எங்கு எப்படி ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும். கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். அதற்கு முகமே இருக்காது. முகமூடி தான் இருக்கும்.

முகமூடி அணிந்த ஊழல் கபடதாரிகள் தான் நம்முடன் இருந்து நம்மை ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள். நமது ஒரு எதிரி பிளவுவாத அரசியல் மற்றொரு எதிரி இந்த ஊழல் கபடதாரிகள்.

நம் மக்களுக்கு இங்கு நல்லாவே தெரியும் யார் இங்கு வரவேண்டும். யார் வரக்கூடாது. இங்கு சாதி இருக்கும்; அது சமூகநீதிக்கான அளவுகோளாக மட்டுமாகவே இருக்கும். அதைவைத்து நம் மண்ணை வேறு மாதிரி மாற்ற வேண்டும் என நினைத்தாலும், அது நம் மக்களே ஏற்கமாட்டார்கள்.

மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல். மக்களோடு மக்களாக அவர்களோடு ஒருவனாக எப்போது மாறாமல் மக்களுடன் நிற்பதுதான் எங்களின் அரசியல்.தேர்வு முடிந்ததும் ரிசல்ட் வருவதுபோல், நல்ல ரிசல்ட் கொடுக்கக்கூடிய திட்டம் வகுக்க வேண்டும். அது அமல்படுத்த வேண்டும், அது மக்களிடம் போய் சேருகிறதா என பார்க்க வேண்டும். சோறு சாப்பிட்டால்தான் பசி ஆறும், சோறு என்று சொன்னாலே பசி ஆறாது.மீன் பிடித்து கொடுக்கக்கூடாது அது தவறு மீன் பிடிக்க கத்துக்கொடுக்க வேண்டும் அதுதான் சரி என சிலர் சொல்லிக்கொண்டு சுத்துவார்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. எங்களின் கான்சப்டே வேறு மிகவும் நடைமுறை வழி. முடிஞ்சவங்க மீன் பிடிக்க கத்துக்கொண்டு வாழட்டும். முடியாதவர்களுக்கு நாம் மீன் பிடித்துக்கொடுத்து வாழ வைப்போம்.

எங்களை பொறுத்தவரையில் மக்களுக்கு நல்லது என்றால் எதுவுமே தவறு கிடையாது. எங்கள் இலக்குகளை எங்களின் வழிகளை தீர்மானிக்கின்றன. மாற்று அரசியல் மாற்று சக்தி எனும் ஏமாற்றும் வேளையெல்லாம் நாம் எப்போதும் செய்யபோவதில்லை. ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன்.

இந்தக் கூட்டம் குடும்பமாக சேர்ந்தோ, கூட்டணி சேர்ந்தோ ஏமாற்றவோ கொள்ளையடிக்க வந்த கூட்டமோ அல்ல. இது ஏதோ சோஷியல் மீடியாவில் கம்பு சுத்த வந்த கூட்டம் அல்ல. சமூகத்திற்காக வால் ஏற்றி நிற்கபோகும் கூட்டம்.

இங்கு ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் மீது ஒரு கலரை பூசிவிட்டு, இவர்கள் மட்டும் மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை எல்லாம் விட்டுக்கொண்டு, இவர்களுக்கு எப்போது பார்த்தாலும், ஃபாசிசம்தான்.

ஒற்றுமையாக இருக்கும் நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என ஒரு சீன் போட்டுக்கொண்டு. அவங்க ஃபாசிசம் என்றால், நீங்க என்ன பாயாசமா? நீங்களும் அவர்களுக்கு கொஞ்சம் கூட சலிக்காதவர்கள்.மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். எனவே இனி உங்களை எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் என்ன வண்ணம் பூசினாலும் எதுவும் நடக்கப்போதில்லை. நாங்கள் இப்போதும் சொல்கிறோம். எங்களின் தவெகவிற்கு நாங்கள் முடிவு செய்துள்ள இந்த நிறத்தை தவிர வேறு நிறத்தையும் பூச முடியாது.பிளவுவாத அரசியல் செய்பவர்களே தவெகவின் ஒரே முழு முதல் கொள்கை எதிரி. அடுத்த திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பெரியாரையும், அண்ணாவின் பெயரையும் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நமது அடுத்த அரசியல் எதிரி” என்று பேசினார்.

Related Post

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

Posted by - May 5, 2023 0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி…

கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted by - November 21, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர்…

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா ஜே.என்.1.. பரபரக்கும் ஆய்வுகள்!

Posted by - December 28, 2023 0
சென்னை: தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஜே.என். 1…

சிறுத்தை நடமாட்டம்… மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted by - April 5, 2024 0
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *