“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

126 0

திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

அப்போது, “சேப்பாக்கத்தில் இந்த முறை வெற்றி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இருக்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். இந்தமுறை தலைவர் என்னை வேறு தொகுதிக்கு மாற்றினாலும் மாற்றலாம்.” என்று கூறினார். அப்போது திமுக தொண்டர்கள் வேறு தொகுதி வேண்டாம் என்றும் சேப்பாக்கம் தொகுதியில் தொடர்ந்து நிற்க வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.தொடர்ந்து பேசிய உதயநிதி, திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் தெரிவித்தார். “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது உண்மையில் வருந்தத்தக்க சம்பவம் தான். ஆனால், அதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். சம்பவம் நடந்த 4 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.” என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதிக்கப்பட்டபோதும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் துணை முதல்வர் குற்றஞ்சாட்டினார்.

Related Post

பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

Posted by - December 4, 2024 0
சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.…

10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்

Posted by - November 24, 2025 0
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது… 91.55% பேர் தேர்ச்சி- இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

Posted by - May 10, 2024 0
தமிழ்நாட்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம்…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

Posted by - December 2, 2022 0
“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.” ஒரு வருடத்துக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *