இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

58 0

தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு சித்திரை மாத முதல் நாள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத முதல் நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி பிறக்கும். இந்த நாளை தமிழ் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

இன்று தமிழ் புத்தாண்டு:

இதன்படி, இன்று தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்கள் காலை முதலே உற்சாகமாக காணப்படுகின்றனர். அதிகாலையிலே எழுந்து குளித்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டை பாரம்பரியமாக தமிழர்கள் கொண்டாடி வருவதால், இந்த நாளில் காலையிலே தங்கள் வீட்டின் முன்பு வாசல் தெளித்து  கோலமிட்டு அலங்கரித்துள்ளனர். மேலும், செல்போன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் காலை முதலே குவிந்து வருகிறது. தமிழ் புத்தாண்டுடன் சேர்ந்து செவ்வாய் கிழமை என்பதால் பக்தர்கள் அதிகளவு கோயில்களில் குவிந்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிவாலயங்களிலும், முருகப்பெருமான் கோயில்களிலும், வைணவத் தலங்களிலும், அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் அதிகளவு காலை முதல் காணப்பட்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் சாமி தரிசனம்:

தற்போது தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரையில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், தமிழ் புத்தாண்டு என்பதால் பல வேட்பாளர்களும் காலையிலே கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து தங்களது பரப்புரையைத் தொடங்கி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Related Post

சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு- திரளான பக்தர்கள் தரிசனம்

Posted by - September 21, 2023 0
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகிய 3 சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து…

பான் கார்டு ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.. வெளியான முக்கியத் தகவல்!

Posted by - March 28, 2023 0
PAN-Aadhaar linking : வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை…

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் – விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் – தமிழக அரசியலில் தாக்கம்?

Posted by - February 2, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்கநாளை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜய் இன்று பல்வேறு தலைவர்களின் சிலையை திறந்து வைக்க உள்ளார். தலைவர்கள் சிலையை திறக்கும் விஜய்:…

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *