இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

214 0

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்காக தடபுடலாக 24 வகையான அசைவ விருந்து மற்றும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள் உணவு அருந்துவதற்காக பந்தியில் அமர்ந்தனர். அப்போது முதலமைச்சர் சாப்பிட்ட பின் தான் தொண்டர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பந்தி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் திமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் அசைவ உணவுக்காக வைக்கப்பட்ட இலையிலேயே சிலர் தலை வைத்து படுத்து உறங்கினர்.

மேலும் சிலரோ ஏன் தான் வந்தோம் என நினைத்து தலையில் கை வைத்தும், சக தொண்டர்களுடன் புலம்பியபடியும் அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட வந்த இடத்தில் நாளிதழை படித்து கொண்டிருந்தனர்.

பின்னர் ஒரு வழியாக முதலமைச்சர் சாப்பிட்ட பின் உணவு பறிமாறப்பட்ட நிலையில் திமுக தொண்டர்கள் அசைவ விருந்தை ருசித்து சென்றனர்.

இதனிடையே திமுக பொதுக்குழு கூட்டத்தில் உணவு பரிமாற கேரளாவில் இருந்து பணியாட்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், திமுக தொண்டர்கள் கேட்ட உணவுப் பொருட்களின் பெயர் தெரியாததால் அவர்கள் பரிமாற முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

கேரளாவில் இருந்து உணவு பரிமாற வந்த 600-க்கும் மேற்பட்டோர் மலையாள மொழியில் பேசியதால் அவர்களிடம் விரும்பிய உணவு களை கேட்க முடியாமல் திமுக தொண்டர்கள் தவித்தனர். இதனால் கேட்ட உணவு கிடைக்காமல் கிடைத்த உணவை உண்டுவிட்டு திமுக தொண்டர்கள் விரக்தியில் புறப்பட்டு சென்றனர்.

Related Post

கடலூரில் “அந்தரத்தில்” தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???

Posted by - September 26, 2023 0
கடலூர்: அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்? சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலிமனை இடங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை

Posted by - August 11, 2023 0
சென்னை: பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள்…

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *