தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

156 0

சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.

லாக்கப் மரணம்:

நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில் அஜித்குமார் மீது போலீசார் பைப்களை வைத்து சரமாரியாக அடித்த வீடியோ சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும், ஆவணங்களும் நீதிபதிகளையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

விசாரணையில் நடந்தது என்ன?

இந்த நிலையில், அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன்குமார் அன்று என்ன நடந்தது? என்பதை தனியார் வார இதழுக்கு பேட்டியாக அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் எங்களை வளத்தாங்க. அஜித் மடப்புரம் கோயிலுக்கு செக்யூரிட்டி வேலைக்கு கொஞ்ச நாளாதான் போயிகிட்டு இருந்தான்.

அஜித்தையும், என்னையும், காரை பார்க்கிங் செய்தவரையும் பல இடங்களுக்கு கூப்பிட்டு போயி கண்டபடி போலீஸ் எங்களை அடிச்சாங்க. எங்களுக்கும், இந்த திருட்டுச் சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நாங்கள் கதறியும் அவங்க விடாம எங்களை அடிச்சாங்க.

தண்ணி கூட கொடுக்கல:

அப்புறம் என்னை மட்டும் விட்டுட்டாங்க. அஜித்துக்க தண்ணி கூட கொடுக்காம கண்டபடி போலீஸ் அவனை அடிச்சாங்க. அவனுக்கு எந்த நோயும் இல்ல. அஜித் வலி தாங்க முடியாமல்தான் உயிரிழந்திருக்கான். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

என்று கண்ணீர்மல்க பேட்டி அளித்துள்ளார்.

போலீசார் கைது:

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ள இந்த காவல்நிலைய மரணத்தில் தொடர்புடைய போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். டிஎஸ்பி சண்முக சுந்தரமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிறப்புறுப்பில் மிளகாய் பொடி:

அஜித்குமாரை போலீசார் விசாரணையின்போது அவரை செருப்பு காலால் எட்டி, உதைத்தும், அவருக்கு தண்ணீர் கொடுக்காமல் அவரது வாய், காது மட்டுமின்றி பிறப்பு உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி விசாரணை என்ற பெயரில் சித்ரவரதை செய்துள்ளனர். இந்த வழக்கி்ல தவறு செய்த போலீசாருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வழக்கில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Related Post

இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

Posted by - February 25, 2025 0
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு…

மின்வாரிய ஊழியர்களை தாக்கிய திமுகவினர் : அண்ணாமலை கண்டனம்!

Posted by - April 22, 2025 0
மின்வாரிய ஊழியர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்…

அனிருத் முதல் மணிகண்டன் வரை! கலைமாமணி விருதுகள் 2021-2023 யார் யாருக்கு விருதுகள்?

Posted by - September 24, 2025 0
 கடந்த மூன்று ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொது 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் …. 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான…

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *