உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

320 0

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி.

எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 மாதங்களில் இம்மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த 60 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி.பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் இம்மருத்துவமனைக்கு வந்த 33 கர்ப்பிணி பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டில் ஜூலை வரை மேலும் 13 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுOver 60 pregnant women found HIV positive in 16 months in UP hospital, probe  ordered - Sanj Samachar

இது தவிர, முன்னதாக இதே மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவர்களில் 35 கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்கனவே எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்ட பெண்களுக்கு அரசு தேவையான மருந்துகளை கொடுத்து வருகிறது. இது குறித்து மீரட் மருத்துவமனை அதிகாரி அகிலேஷ் மோகன் கூறுகையில், “மீரட் லாலா ரஜபத் ராய் மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் பிரசவம் நடந்திருக்கிறது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். எவ்வாறு அவர்களுக்கு எய்ட்ஸ் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஒரே மருத்துவமனையில் இந்த அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் அதிகமாக இருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. பொதுவாக பாலியல் உறவு, ரத்தம் பரிமாற்றம், ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. தாயிடமிருந்து பிரசவத்தின் போதும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது.

Related Post

மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்

Posted by - January 17, 2026 0
 தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளதா.? என்பதை தற்போது பார்க்கலாம்.. ராக்கெட் வேகத்தில் தங்கம்…

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - June 9, 2023 0
பெங்களூரு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் இதுதான் – ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்

Posted by - July 4, 2023 0
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ்…

கள்ளக்காதலுக்கு இடையூறு- 4 வயது மகளை கொன்று நாடகமாடிய கல்நெஞ்ச தாய்

Posted by - July 31, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவர். இவரது மனைவி கல்யாணி (வயது 22). இவர்கள் 2018-ம் ஆண்டு காதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *