எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

238 0

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சீன – இந்திய எல்லைப் பகுதியான தவாங்கில் கடந்த 9ஆம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் உண்டானது. இதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி இரு நாட்டு கமாண்டர்கள் அளவிலான 17வது சுற்றுப் பேச்சுவார்த்தை சுஷுல்-மால்டோ எல்லையில் நடைபெற்றது.

அதில், மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடிவு எட்டப்பட்டது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியா – சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை விரைவில் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீன பத்திரிகையாளர்கள் மத்தியில் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை வாங்க் யீ பேசினார். அப்போது, சீனா மற்றும் இந்தியா என இரு நாடுகளும் ராஜதந்திர மற்றும் ராணுவ வழி தொடர்புகளை பேணி வருகின்றன. இரு நாடுகளும் எல்லையில் அமைதி நிலவ வேண்டுமென உறுதிகொண்டுள்ளன. இரு நாட்டு உறவுகளின் உறுதியான வளர்ச்சியை உறுதிசெய்ய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.இந்திய – சீன படை வீரர்களின் மோதலுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Post

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

Posted by - March 4, 2026 0
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று…

ட்ரம்புடன் கைகோர்ப்பு.. இந்தியாவிற்கு எதிராக பேசும் கனடா பிரதமர், ஊறுகாய் ஆகும் பாக்., பிரச்னை

Posted by - October 8, 2025 0
இந்தியா – பாகிஸ்தான் மோதலை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பை, கனடா பிரதமர் பாராட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை அமெரிக்க…

எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்…

Posted by - May 7, 2025 0
இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூரால், பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன் முழு விவரங்களை பார்க்கலாம். பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதற்கு பதிலடியாக,…

உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

Posted by - February 16, 2023 0
வாஷிங்டன் : அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார். ஏற்கனவே குடியரசு…

மெக்சிகோவில் 122 டிகிரி வெயில்- வெப்ப அலை தாக்கி 100 பேர் பலி

Posted by - June 30, 2023 0
மெக்சிகோ: மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 3 வாரங்களாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *