கடந்த ஆண்டை விட தீபாவளி தினத்தில் குறைந்த தீ விபத்து… கைகொடுத்த விழிப்புணர்வு.. தீயணைப்பு துறை!

289 0

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கும்போது தீ விபத்துகளும், தீக்காயங்களும் ஏற்படுவது வழக்கம். இந்த விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் ஏற்கெனவே ஆலோசனை வழங்கி இருந்தனர்.

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தீயணைப்புத்துறை சார்பில் சென்னையில் 276 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரத்து 46 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்துகள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 254 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 150 விபத்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு 102 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு 48 தீ விபத்துகள் பதிவானதாக தீயணைப்புத்துறை கூறியுள்ளது.தீ விபத்தில் காயமடைந்த 544 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னையில் நேர விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Post

முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

Posted by - November 30, 2023 0
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

சட்ட விரோத பண பரிமாற்ற புகார்.. தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கியது யார்?

Posted by - September 26, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில்…

கங்குவா படத்திற்கு தடைவிதிக்க கோரி போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்..!!

Posted by - November 8, 2024 0
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரி போடப்பட்ட…

கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted by - February 16, 2023 0
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *