கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் – விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

112 0

பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்புக்கு முன் விகடன் குழுமம் தனது இணைதள பக்கத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 15ஆம் தேதி விகடன் இணையதளத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை முடக்கியது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் குழுமம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், நட்பு நாடுகளில் உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விகடன் கேலி சித்திரம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விகடன் குழுமம் தரப்பில், கேலி சித்திரத்திரம் வெளியிட்டதற்காக ஒட்டு மொத்த இணையதளத்தையும் முடக்க அவசியமில்லை என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, விகடன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பிரதமர் தொடர்பான கேலிச் சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டார்.

 

 

மேலும், கேலி சித்திரத்தை நீக்கியது குறித்து மத்திய அரசுக்கு விகடன் குழுமம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் இணைதள முடக்கத்தை மத்திய அரசு நீக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

Related Post

வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

Posted by - March 16, 2023 0
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,…

முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க..

Posted by - December 2, 2022 0
முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்

Posted by - November 24, 2025 0
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *