வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

334 0

pதொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,  பஸ்ஸில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? ஓசி பஸ்ஸில் போகிறீர்கள் என சொல்லி பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

அந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர்களும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.  இதை அடுத்து விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பொன்முடியிடம் பெண்கள் குறைகளை கூறிய போது , இந்த கிராமத்தில் எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. பெருசா கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க.. என்று அதட்ட,   பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறை சொல்லிய ஒரு பெண்ணை வாயை மூடிக்கிட்டு இரு என்றுஅமைச்சர் பொன்முடி அதட்டியதால் சலசலப்பு எழுந்திருக்கிறது.

pon

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசிய போது, நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன.  பல பணிகள் நடக்கின்றன.  கிராமங்களிலும் நகரங்களிலும் பல பணிகள் நடந்து வருகின்றன.  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் நேருவின் மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் ஏராளமான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

சென்னையாக இருந்தாலும் சரி , திருக்கோவிலூர் ஆக இருந்தாலும் சரி,  விழுப்புரம் ஆக இருந்தாலும் சரி… என்று அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டிருந்தபோது,  ஒரு பெண் எழுந்து குறைகளைச் சொன்னார்.  அவரை பார்த்து கேலி செய்த அமைச்சர் பொன்முடி,   ‘’வாயை மூடிக்கிட்டுரு..’’ என்று அதட்டினார்.  பின்னர் அந்த பெண்ணிடம்,  ’’உன் வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா?’’ என்று கேட்டார்.  அதற்கு அந்தப் பெண் சொன்ன பதிலை கேட்ட பின்னர்,  ’’போயிட்டாரா.. பாவம்..’’ என சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்போது தொண்டர்கள் சத்தம் போடத் துவங்கினர்.  உடனே அமைச்சர் பொன்முடி , அமைதியாக இருக்கும் படி கூறி,  அந்த அம்மா குறை சொல்லுது நல்லது தானே என சொல்லி சமாளித்து தன் பேச்சை தொடர்ந்தார்.

Related Post

10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்

Posted by - November 24, 2025 0
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியாக உயரும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - November 14, 2023 0
சென்னை: இன்று உலக சர்க்கரை வியாதி தினம். சர்க்கரை வியாதியை பொறுத்தவரை நாள்பட்ட நோய். இது வந்தாலே வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரையோடுதான் வாழ வேண்டிய சூழ்நிலை. இந்த…

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Posted by - July 10, 2023 0
சென்னை: தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான…

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது

Posted by - September 25, 2023 0
சென்னை: இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *